ஆப்நகரம்

அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கீர்த்தி சுரேஷ்

‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் தனக்கு வெற்றி வாய்ப்பையும், நல்ல முன்னேற்றத்தையும் பெற்றுத்தரும் என்று அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

TOI Contributor 5 Aug 2017, 9:33 pm
‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் தனக்கு வெற்றி வாய்ப்பையும், நல்ல முன்னேற்றத்தையும் பெற்றுத்தரும் என்று அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
Samayam Tamil more expectations from keerthi suresh about thaana serndha kootam
அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் கீர்த்தி சுரேஷ்


நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் படங்களில் நடிக்கத் துவங்கிய சிறிது காலத்தில் முன்னணி நடிகர்களான தனுஷ், விஜய், சூா்யா உள்ளிட்டோருடன் இணைந்து பணியாற்ற துவங்கி விட்டார். தற்போது அவர் ‘தானா சேர்ந்த கூட்டம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் சூர்யாவுடன் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தின் மூலம் தமது திறமையை நிரூபிக்க வேண்டும், ரசிகா்களை கவா்ந்து வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மற்ற படங்களை விட இந்தப் படத்திற்கு அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார்.

மேலும் நவரச நாயகன் கார்த்திக் ‘அநேகன்’ படத்திற்கு பிறகு, மீண்டும் இந்தப் படத்தில் ‘ரீ என்ட்ரி’கொடுத்துள்ளார் நெகடிவான வேடமாக இருந்ததால், முதலில் இதில் நடிக்க கார்த்திக் மறுத்ததாகவும், சூர்யாவின் வற்புறுத்தல் காரணமாக, பின்னர் நடிக்க சம்மதித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், படக்குழு இந்த தகவலை மறுத்துள்ளது.

கார்த்திக்கிற்கு, இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த வேடம்; நெகடிவான வேடம் இல்லை என்கின்றனர். கீர்த்தி சுரேஷும், இந்த படத்தின் வெற்றியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்.

More expectations from keerthi suresh about Thaana serndha kootam

அடுத்த செய்தி

டிரெண்டிங்