ஆப்நகரம்

வைரஸை விட கொரோனா காலர் ட்யூன் கொடுமையா இருக்கு: சிவாஜி பேரன்

கொரோனா வைரஸை விட கொரோனா காலர் ட்யூன் கொடுமை தான் பெரும் கொடுமையாக உள்ளது என்று சுஜா வருணியின் கணவர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 18 Mar 2020, 4:38 pm
கொரோனா வைரஸை விட கொரோனா காலர் ட்யூன் கொடுமை தான் பெரும் கொடுமையாக உள்ளது என்று சுஜா வருணியின் கணவர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil more than corona virus corona ringtone kills people netizens
வைரஸை விட கொரோனா காலர் ட்யூன் கொடுமையா இருக்கு: சிவாஜி பேரன்



கொரோனா காலர் ட்யூன்

கொரோனா வைரஸ் பரவுவதால் அதில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று காலர் ட்யூன் வைத்துள்ளார்கள். ஒவ்வொரு முறையும் யாருக்காவது கால் செய்தால் கொரோனா பற்றிய விபரங்களை கேட்ட பிறகே ரிங் செல்கிறது. அதற்குள் நமக்கு பொறுமை போய்விடுகிறது. இந்த கொடுமையாலேயே யாருக்கும் போன் செய்யவே பயமாக உள்ளது. நமக்கு மட்டும் அல்ல நடிகரும், சிவாஜி கணேசனின் பேரனுமான சிவகுமாரும் அதே நிலையில் தான் இருக்கிறார்.

சிவகுமார்

யாருக்காவது அவசரமாக போன் செய்ய முயற்சி செய்யும்போது என் ரியாக்ஷன் என்று கூறி தன் தாத்தா சிவாஜி கணேசன் கதறும் வீடியோவை வெளியிட்டுள்ளார் சிவகுமார். அந்த வீடியோவை பார்த்தவர்கள், நீங்கள் மட்டும் இல்லை பாஸ் நாங்களும் இப்படித் தான் கதறிக் கொண்டிருக்கிறோம். பொருத்தமான வீடியோவை வெளியிட்டுள்ளீர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

Twitter-Shiva Kumarr

கதறல்

சிவகுமார் மட்டும் அல்ல பலரும் அந்த கொரோனா காலர் ட்யூனால் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கொரோனாவை விட அந்த காலர் ட்யூன் தான் கொலையா, கொல்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

Twitter-🤔எனக்கொரு டவுட்டு ⁉

வேலை

காலர் ட்யூன் கொடுமை ஒரு பக்கம் என்றால் இந்த கொரோனாவால் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் கொடுமை மறுபக்கம். திருமணமானவர்களின் நிலை தான் ரொம்ப பாவமாக இருக்கிறது. உலக மக்கள் கொரோனாவை பார்த்து பயப்படும்போது நம்ம தமிழ் மீம்ஸ் கிரியேட்டர்கள் மட்டும் அந்த வைரஸையே கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை.

Twitter-விக்கி_டாக்ஸ்

அடுத்த செய்தி

டிரெண்டிங்