ஆப்நகரம்

திரைப்படமாகும் அன்னை தெரசா வாழ்க்கை வரலாறு!

மறைந்த அன்னை தெரசாவின் வாழ்க்கை வரலாறு தற்போது திரைப்படமாக்கப்படவுள்ளது.

Samayam Tamil 12 Mar 2019, 4:27 pm
அல்போனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் அன்னை தெரேசா. இவர் இந்தியக் குடியுரிமையைப் பெற்றவர். மேலும் இவர் ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவர் பல ஆதரவற்ற மக்களுக்காக தொண்டாற்றியவர்.
Samayam Tamil mother-tresa


அன்னை தெரசாவுக்கு 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசை கிடைத்தது. அதையடுத்து 1980இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரதரத்னா விருதினையும் வழங்கினர். அன்னை தெரேசாவின் பிறர் அன்பின் பணியாளர் சபை அவரது இறப்பின் போது 123 நாடுகளில் 610 தொண்டு நிறுவனங்களை இயக்கிக்கொண்டிருந்தது.

இதில் எயிட்ஸ் ,காசநோய் ,தொழுநோய்யால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நல்வாழ்வு மையங்கள், இலவச உணவு வழங்குமிடங்கள், குழந்தைகள் மற்றும் குடும்பத்திற்கான ஆலோசனைத் திட்டங்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவை அடங்கும்.

இந்நிலையில் அன்னை தெரேசா வாழ்கையை மையமாக வைத்து ஹாலிவுட் மற்றும் பாலிவுட் என இரண்டிலும் படமெடுக்க உள்ளனர். இதன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்