ஆப்நகரம்

தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு விவசாயி: மிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயன்!

அறிவியல் சார்ந்த புதிய படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் விவசாயியாக நடிப்பதாக இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 4 Feb 2019, 4:14 pm
அறிவியல் சார்ந்த புதிய படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் விவசாயியாக நடிப்பதாக இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil siva


தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது வருடத்திற்கு ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்திலும் அறிவியல் சார்ந்த ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிக்கப்பட்ட நிலையில், இப்படம் குறித்து இயக்குனர் ரவிக்குமார் கூறுகையில்,

இது ஒரு அறிவியல் சார்ந்த படம். இதில், சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் அறிவியல் சார்ந்த படம் என்பதால், அதிகளவில் கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளன. இதற்காக 100க்கும் மேற்பட்ட ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

இவ்வளவு ஏன், ஹாலிவுட் படங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் அலெக்சா எல்.எப் என்ற கேமரா இப்படத்தில் பயன்படுத்தப்படுகிறது. சென்னை, ஹைதராபாத், அரக்குவேலி ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் விவசாயியாக நடிக்கிறார். ரகுல் ப்ரீத் சிங் வேலை பார்க்கும் பெண்ணாக நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து கருணாகரன், யோகி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்