தமிழில் இசை ஆல்பம் மூலம் புகழ்பெற்று இசையமைப்பாளராக மாறிய ஹிப்ஹாப் ஆதி "மீசைய முறுக்கு", "நட்பே துணை" என்று இரண்டு படங்களில் கதாநாயகனாக வெற்றி பெற்றுள்ளார். அதே போல் "இன்று நேற்று நாளை", "தனி ஒருவன்", "இமைக்கா நொடிகள்" என்று இசையிலும் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார். இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என பன்முக கலைஞராக திகழ்கிறார்.
Also Read: நேர்கொண்ட பார்வை படத்தின் அஜித்தின் அதிர வைக்கும் புகைப்படங்கள்!
ஆதி தற்போது புதுமுக இயக்குநர் ராணாவுடன் இணைந்து பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். மீசைய முறுக்கு, நட்பே துணை என்று வரிசையாக ஆதியின் அணைத்து படங்களையும் தயாரித்து வருகிறார் இயக்குநர் சுந்தர் சி. இதையடுத்து ஆதியின் 4வது படத்தில் நேர்கொண்ட பார்வை இயக்குநர் ஹெச்.வினோத் பணிபுரிவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read: மனரீதியாக பாதிக்கப்பட்டு ஆயூர்வேதத்தால் மீண்டேன்: ஆண்ட்ரியா!!
இயக்குநர் வினோத் இது குறித்து பேசும் போது "ஆதியின் 4-வது படத்துக்கு நான் தான் கதை எழுதுகிறேன். ஆனால் இப்படத்தை என்னுடைய அசிஸ்டெண்ட் இயக்குகிறார். இந்தப் படத்திற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கான வசனத்தையும் நான்தான் எழுதுகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
Also Read: பெண் உரிமைக்காக போராடும் தல: 2ம் பாரதியாரே என்று அழைத்த ரசிகர்கள்!
தற்போது இயக்குனர் ஹச். வினோத் "நேர்கொண்ட பார்வை" வரும் 8ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அதை தொடர்ந்து அஜித்தின் 60-ஆவது படத்தையும் இயக்கப் போகிறார். பெயர் வைக்கப் படாத இந்தப் படத்தை இந்த மாத இறுதியில் துவங்க உள்ளனர். இந்தப் படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க உள்ளார்.
இதற்கிடையில் இயக்குனர் வினோத் தளபதி விஜய்யை நேரில் சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். கமர்ஷியல் கலந்த ஒரு புதுவிதமான திரைக்கதையை உருவாக்கியுள்ளாராம். கதை சொல்லிவிட்டு வந்த வினோத் தற்போது விஜய்யின் பதிலுக்காக காத்திருக்கிறாராம்.
Also Read: நேர்கொண்ட பார்வை படத்தின் அஜித்தின் அதிர வைக்கும் புகைப்படங்கள்!
ஆதி தற்போது புதுமுக இயக்குநர் ராணாவுடன் இணைந்து பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். மீசைய முறுக்கு, நட்பே துணை என்று வரிசையாக ஆதியின் அணைத்து படங்களையும் தயாரித்து வருகிறார் இயக்குநர் சுந்தர் சி. இதையடுத்து ஆதியின் 4வது படத்தில் நேர்கொண்ட பார்வை இயக்குநர் ஹெச்.வினோத் பணிபுரிவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Also Read: மனரீதியாக பாதிக்கப்பட்டு ஆயூர்வேதத்தால் மீண்டேன்: ஆண்ட்ரியா!!
இயக்குநர் வினோத் இது குறித்து பேசும் போது "ஆதியின் 4-வது படத்துக்கு நான் தான் கதை எழுதுகிறேன். ஆனால் இப்படத்தை என்னுடைய அசிஸ்டெண்ட் இயக்குகிறார். இந்தப் படத்திற்கான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கான வசனத்தையும் நான்தான் எழுதுகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
Also Read: பெண் உரிமைக்காக போராடும் தல: 2ம் பாரதியாரே என்று அழைத்த ரசிகர்கள்!
தற்போது இயக்குனர் ஹச். வினோத் "நேர்கொண்ட பார்வை" வரும் 8ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. அதை தொடர்ந்து அஜித்தின் 60-ஆவது படத்தையும் இயக்கப் போகிறார். பெயர் வைக்கப் படாத இந்தப் படத்தை இந்த மாத இறுதியில் துவங்க உள்ளனர். இந்தப் படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க உள்ளார்.
இதற்கிடையில் இயக்குனர் வினோத் தளபதி விஜய்யை நேரில் சந்தித்து கதை சொல்லியிருக்கிறார். கமர்ஷியல் கலந்த ஒரு புதுவிதமான திரைக்கதையை உருவாக்கியுள்ளாராம். கதை சொல்லிவிட்டு வந்த வினோத் தற்போது விஜய்யின் பதிலுக்காக காத்திருக்கிறாராம்.