ஆப்நகரம்

நடிகர் மாதவன் மீது வழக்கு தொடர உள்ளேன் : இசையமைப்பாளர் ஆவேசம்

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் கதையை திரைப்படமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாதவனுக்கு சட்ட ரீதியாக நோட்டீஸ் அனுப்பப் போவதாக இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 2 Nov 2018, 3:11 pm
இஸ்ரோவின் முன்னாள்விஞ்ஞானி நம்பி நாராயணன் கதையை திரைப்படமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாதவனுக்கு சட்ட ரீதியாக நோட்டீஸ்அனுப்பப் போவதாக இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil zdlefkqtus-1533719187


இஸ்ரோவின் முன்னாள்விஞ்ஞானி நம்பி நாரயணன் மீது ரகசியங்களை விற்றதாக தேச விரோத வழக்குதொடரப்பட்டுபிறகுஅந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

இவரின் வாழ்க்கையில் நடந்தசம்பவங்கள்திரைபடமாக தயாராகிறாது. இதில் நம்பிநாராயணன் வேடத்தில் மாதவன் நடிக்கிறார்.இசையமைப்பாளர் எஸ்.எஸ் குமரன் கதை உரிமை தன்னிடம் இருப்பதாகவும், தனது அனுமதி இல்லாமல் படமாக்க கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார்.தமிழ் தயாரிப்பாளர்கள்சங்கத்திலும் மனு கொடுத்தார். இவர் தமிழில் வெளியான பூ,களவாணிக்கு இசையமைத்துள்ளார்.

இவர் தனது எதிர்ப்பை வலுவாக பதிவு செய்த நிலையிலும்படத்தின் வேலைகள் தொடங்கி உள்ளதால்,மாதவனுக்கு சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாகஅவர் கூறியதவது ‘ 20 ஆண்டுகளுக்கு முன்பு நம்பி நாராயணன் வாழ்க்கை கதையை தொலைக்காட்சி தொடராக தயாரித்தேன். ஆனால் சட்ட பிரச்சினைகளால் அது வெளியாகவில்லை. இதனால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது. எனது நிலையை மாதவனிடம் தெரிவித்தபிறகும் அவர் பிடிவாதமாக படத்தின் தொடக்க விழாவை நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.

எனது அனுமதி இல்லாமல் நம்பி நாராயணன் வாழ்க்கையை படமாக்க கூடாது. எனவே மாதவன் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்