ஆப்நகரம்

விரைவில் 2வது படத்தை தயாரிக்கவுள்ளார் யுவன்ஷங்கர் ராஜா!

விரைவில் 2வது படத்தை தயாரிக்கவுள்ளார் யுவன்ஷங்கர் ராஜா!

TOI Contributor 10 Mar 2017, 6:36 pm
இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா முதல் படத்தை தயாரித்து வரும் நிலையில் தனது இரண்டாவது படத்தை விரைவில் தயாரிக்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
Samayam Tamil musician yuvan shankar raja produce his second movie soon
விரைவில் 2வது படத்தை தயாரிக்கவுள்ளார் யுவன்ஷங்கர் ராஜா!


இசைஞானி இளையராஜாவின் வாரிசான யுவன்ஷங்கர் ராஜா, திரையுலகில் அறிமுகமாகி இருபது ஆண்டுகள் முடிவடைந்துவிட்டன. இவர் இசைத்துறையில் மட்டுமின்றி தயாரிப்பு துறையிலும் இறங்கியுள்ளார். ஒய்.எஸ்.ஆர். பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை சமீபத்தில் தொடங்கிய யுவன்ஷங்கர் ராஜா, அதன் மூலம் கொலையுதிர்க்காலம்‘ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கி வருகிறார். முழுக்க முழுக்க வெளிநாட்டில் நடைபெறும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யுவன்ஷங்கர் ராஜா இரண்டாவது பட அறிவிப்பை மிக விரைவில் வெளியிட உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். தனது இரண்டாவது படம் அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும் என்றும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்