ஆப்நகரம்

நான் நடிக்கும் படம் இரு மொழிகளில் வெளியாக வேண்டும்: கீர்த்தி சுரேஷ்!

நான் நடிக்கும் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக வேண்டும் என்ற கண்டிஷனோடு ஒரு படத்தில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

Samayam Tamil 20 Feb 2019, 3:23 pm
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தெலுங்கில் கடைசியாக வெளியான படம் ‘மகாநடி’. அதையடுத்து தமிழில் ‘சண்டக்கோழி 2’, ‘சர்கார்’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். இதையடுத்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வந்தும் எதிலும் ஒப்புக் கொள்ளாமல் இருந்தார். 20 படங்களுக்கும் மேல் கதை கேட்டுள்ளார். எந்த கதையும் அவருக்குப் பிடிக்கவில்லை. இதனால் நடிப்புக்கு சிறிய இடைவெளி விட்டிருந்தார்.
Samayam Tamil keerthi-suresh


தற்போது மீண்டும் நடிக்கலாம் என்று முடிவு செய்து களத்தில் இறங்கியுள்ளார். தெலுங்கு இயக்குனர் நரேந்திரநாத் கூறிய கதை, அவரை ரொம்பவும் இம்ப்ரஸ் செய்ததாம். ஆகையால் அவர் படத்தில் நடிக்க சம்மதித்தார். இது ஹீரோயினி முக்கியத்துவம் உள்ள படமாக இருப்பதால் உடனே சம்மதித்துள்ளார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்க அவர் ஒரே ஒரு கண்டிஷன் மட்டும்தான் விதித்தாராம். “இந்தப் படத்தை ‘மகாநடி’ மாதிரி தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் வெளியிட வேண்டும். அவரின் கண்டிஷனுக்கு தயாரிப்பு நிர்வாகம் பணிந்தது. உடனே கீர்த்திககு மேக்கப் போட்டு படப்பிடிப்பை தொடங்கி விட்டனர் படக்குழுவினர்.

கீர்த்தி நடிக்கும் படத்தில் ஹீரோ என்று யாரும் தெரியவில்லை. அநேகமாக இது ஆக்ஷன் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்