ஆப்நகரம்

திருமணத்துக்குப் பின் நான் நடிப்பதா வேண்டாமா? : நடிகை ரித்விகா!

விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ள நடிகை ரித்விகா, என்னுடைய திருமணத்துக்குப் பின், நான் நடிப்பதா வேண்டாமா என்பதை என் கணவர்தான் முடிவு செய்வார் என்று கூறியுள்ளார்.

Samayam Tamil 21 Jan 2019, 4:37 pm
பாலா இயக்கத்தில் வெளியான ‘பரதேசி’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதையடுத்து இவர் ‘நினைத்தது யாரோ’, ‘மெட்ராஸ்’, ‘அழகு குட்டி செல்லம்’, ‘ஒரு நாள் கூத்து’, ‘அஞ்சல’, ‘கபாலி’, ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, ‘’இருமுகன்’, ‘டார்ச் லைட்’, ‘சிகை’ உள்பட பல படங்களில் நடித்துள்ளவர்.
Samayam Tamil rithivika


மேலும் இவர் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் சீசன் 2வில் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே பிரபலமானார் ரித்விகா. இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தனது திருமணம் பற்றி நடிகை ரித்விகா ஒரு பட விழாவில் பேசுகையில், ‘‘நான் யாரோ ஒருவரை காதலித்து வருவதாகவும், இந்த வருடம் திருமணம் நடக்கும் என்றும் சினிமா வட்டாரத்தில் தகவல் வருகிறது. நான் இந்த வருடம் திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை.

என் திருமணம் அடுத்த வருடம் நடைபெறும். அதற்குள் நான் நடிக்க வேண்டிய படங்களை நடித்து முடித்துவிடுவேன். புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. திருமணத்திற்கு பின் நடிப்பதா, வேண்டாமா என்பதை என் கணவர்தான் முடிவு செய்வார் என்றார் ரித்விகா

அடுத்த செய்தி

டிரெண்டிங்