ஆப்நகரம்

என் மக்களின் உணர்வே முக்கியம்; விருது கொடுத்தாலும் வேண்டாம்: விஜய் சேதுபதி!!

‘’நீட் தேர்வால் ஒரு உயிரை பலிகொடுத்த நிலையில் தற்போது தேசிய விருது வழங்கினால் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்’’ என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

TOI Contributor 26 Sep 2017, 1:21 pm
‘’நீட் தேர்வால் ஒரு உயிரை பலிகொடுத்த நிலையில் தற்போது தேசிய விருது வழங்கினால் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்’’ என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil my peoples emotion is more important than award says vijay sethupathi
என் மக்களின் உணர்வே முக்கியம்; விருது கொடுத்தாலும் வேண்டாம்: விஜய் சேதுபதி!!


விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா மற்றும் பசுபதி நடித்த கருப்பன் திரைப்படம் வரும் 29ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை ஸ்ரீ சாய் பிலிம்ஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, ரேணிகுண்டா பன்னீர் செல்வம் இயக்கியுள்ளார்.

இதை முன்னிட்டு விஜய் சேதுபதி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘’விக்ரம் வேதா படம் வெளிவந்தபோது எனக்கு இந்தப் படம் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் இருந்தது. அதற்குக் காரணம் அந்தப் படத்தில் நான் ஏற்றுக் கொண்ட வேடம். ஆனால், கருப்பன் படம் கண்டிப்பாக வெற்றி பெறும். இதற்குக் காரணம், இந்தப் படம் நம் மண் சார்ந்த கதை. பெஸ்டிவல் மூட் இந்தப் படத்தில் இருக்கும். இந்தப் படத்தில் மாடுபிடி வீரனாக நடித்து இருக்கிறேன். கணவன், மனைவிக்கு இடையில் அன்பை சொல்லும் படம்’’ என்றார்.

இடையில் செய்தியாளர் ஒருவர், நீட் தேர்வு, நவோதயா போன்ற விஷயங்களில் மாநில அரசின் மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நேரத்தில் உங்களுக்கு தேசிய விருது வழங்கினால் ஏற்றுக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு, ‘’நீட் தேர்வால் நாம் ஒரு உயிரை பலி கொடுத்து இருக்கிறோம். இந்த தருணத்தில் நான் விருதை ஏற்றுக் கொள்ளமாட்டேன். விருதை விட என் மக்களின் உணர்வே முக்கியம்’’ என்றார்.

My people’s emotion is more important than award. I will not accept central government award says Vijay Sethupathi

அடுத்த செய்தி

டிரெண்டிங்