ஆப்நகரம்

அறிவித்தபடி வளைகாப்பை நடத்தி முடித்த ‘நான் செய்த குறும்பு’ படக்குழு!

‘நான் செய்த குறும்பு’ படத்தின் துவக்கவிழா அன்று கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு வைபவத்தை நடத்தி முடித்துள்ளது.

Samayam Tamil 6 Aug 2018, 8:03 pm
‘நான் செய்த குறும்பு’ படத்தின் துவக்கவிழா அன்று கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு வைபவத்தை நடத்தி முடித்துள்ளது.
Samayam Tamil Nan-seitha-kurumbu


‘கயல்’ சந்திரன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நான் செய்த குறும்பு’. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் மகா விஷ்ணு இயக்கி வருகிறார். இந்தப் படத்தை ரைட்டர் இ மேஜினேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் பூஜை இன்று சென்னை பிரசாத் லேப் வளாகத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் நடைபெற்றது. தொடர்ந்து பிரசாத் லேப் ப்ரிவியூ தியேட்டரில் படத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இது வழக்கமான விழாவாக இல்லாமல் ஒரு வித்தியாசமானதாக அமைந்து இருந்தது. விழா மேடையில் ஐந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.
அப்பெண்மணிகள் ஐவரையும் மேடையில் அமர வைத்தனர். மங்கல இசை ஒலித்தது . வேத மந்திரம் முழங்கியது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மாலையிட்டு மஞ்சள் பூசி , சந்தனம் பூசி , குங்குமம் இட்டு ,புது வளையல்கள் அணிவித்து அட்சதை தூவி, இனிப்புகள் ஊட்டினர். அவர்களுக்குப் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டு படக் குழுவின் சார்பில் பெருமைப்படுத்தப்பட்டனர் . இயக்குநர் மற்றும் படக் குழுவினர் வளைகாப்பு நடத்தப்பட்ட பெண்களின் காலில் விழுந்து வணங்கினார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்