ஆப்நகரம்

9 ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தும் ‘நான் செய்த குறும்பு’ படக்குழு!

‘நான் செய்த குறும்பு’ படப்பிடிப்பு தொடங்கும் நாளன்று ஆதரவற்ற 9 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

Samayam Tamil 4 Aug 2018, 5:01 pm
‘நான் செய்த குறும்பு’ படப்பிடிப்பு தொடங்கும் நாளன்று ஆதரவற்ற 9 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.
Samayam Tamil 9 ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தும் ‘நான் செய்த குறும்பு’ படக்குழு!


‘கயல்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சந்திரன். அதைத் தொடர்ந்து ‘ரூபாய்’ என்ற படத்தில் நடித்தார். தற்போது சந்திரன், ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’, ‘கிரஹணம்’, ‘பார்ட்டி’, ‘டாவு’ உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு ‘நான் செய்த குறும்பு’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை மகா விஷ்ணு என்பவர் தயாரித்து இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் சந்திரனுக்கு ஜோடியாக அஞ்சு குரியன் நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 5ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.

படப்பிடிப்பு தொடங்கும் நாளன்று, ஆதரவற்ற 9 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்