ஆப்நகரம்

25 இயக்குனர்கள் ஒன்றிணைந்து துவக்கி வைத்த ‘நாயே பேயே’! படப்பிடிப்பு

25 இயக்குனர்கள் ஒன்றாக சேர்ந்து க்ளாப் அடித்து துவக்கி வைத்த ஒரே படம் ‘நாயே பேயே’.

Samayam Tamil 17 May 2019, 11:43 pm
25 இயக்குனர்கள் ஒன்றாக சேர்ந்து க்ளாப் அடித்து துவக்கி வைத்த ஒரே படம் ‘நாயே பேயே’.
Samayam Tamil Naaye Peye


‘தனி ஒருவன்’, ‘வழக்கு எண் 18/9’, ‘ஒரு குப்பை கதை’ ஆகிய படங்களில் எடிட்டராக பணியாற்றியவா் கோபிகிருஷ்ணா. இவர் தயாரிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘நாயே பேயே’. படத்தின் ஹீரோவாக நடன இயக்குனர் தினேஷ் நடிக்கிறார்.கதாநாயகியாக ஐஸ்வரியா நடிக்க, இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்தப் படத்தைகுறும்பட இயக்குனர் சக்திவாசன் எழுதி, இயக்குகிறார்.

நகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன், மனம் போன போக்கில் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான். நிரந்தர வேலையில் இல்லாத அவன்,அவ்வப்போது சமயோசிதமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கின்றான். இந்த சூழலில், அவனுக்கு ஒரு பிரம்மாண்டமான ஐடியா உதிக்க, அந்த ஒரே ஒரு ஜாக்பாட் திருட்டுடன், வாழ்க்கையில் செட்டிலாக முடிவு செய்கிறான். நாயைக் கடத்தும் நால்வர் தவறுதலாக பேயைக் கடத்திவிடுகின்றனர். பேயை சமாளிக்க முடியாமல் சிக்கித் தவித்து சின்னா பின்னமாவதை நகைச்சுவை கலந்து, ஹாரர் எஃபெக்ட்டில் மிகவும் சுவராஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் படமாக்குகிறார் இயக்குனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை இன்று 25 முன்னணி இயக்குனர்கள் முன் நின்று க்ளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்