‘நாச்சியார்’ படத்தில் ஜி.வி. பிரகாஷின் மொத்த தோற்றத்தையே மாற்றியுள்ளார் இயக்குனர் பாலா.
டைரக்டர் பாலா படம் என்றாலே அது அவார்டு படமாக இருக்கும் அல்லது சென்டிமெண்ட் படமாக இருக்கும். அவர் படத்துக்கென்று ஒரு தனித்துவம் உண்டு. அதேப்போல் தனது படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை படப்பிடிப்பின் போது அந்தந்த கதாபாத்திரங்களாக மாற்றிவிடுவார். அதோடு அந்த படங்கள் முடிகிற வரை அவர்கள் வேறு படங்களில் நடிக்க முடியாத அளவுக்கு உருவ கெட்டப்பையே மாற்றி விடுவார் பாலா.
அந்த வகையில், இதற்கு முன்பு அவரது படங்களில் நடித்த விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா, சசிகுமார் ஆகிய நடிகர்களை அவர்களே நினைத்துப்பார்க்காத அளவுக்கு வித்தியாசமாகக் காண்பித்தார் பாலா.
இந்த நிலையில், தற்போது அவர் தொடங்கியிருக்கும் ‘நாச்சியார்’ படத்தில் போலீஸ் வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார். ஆனால், கதையின் நாயகனாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் நெகடீவ் ரோலில் அதாவது சைக்கோ கொலையாளியாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதனால் இதுவரை காதல் நாயகனாக நடித்து வந்த ஜி.வி.பிரகாஷை ‘நாச்சியார்’ படத்தில் படு பயங்கரமான தோற்றத்தில் படமாக்கப்போகிறார் இயக்குனர் பாலா.
டைரக்டர் பாலா படம் என்றாலே அது அவார்டு படமாக இருக்கும் அல்லது சென்டிமெண்ட் படமாக இருக்கும். அவர் படத்துக்கென்று ஒரு தனித்துவம் உண்டு. அதேப்போல் தனது படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை படப்பிடிப்பின் போது அந்தந்த கதாபாத்திரங்களாக மாற்றிவிடுவார். அதோடு அந்த படங்கள் முடிகிற வரை அவர்கள் வேறு படங்களில் நடிக்க முடியாத அளவுக்கு உருவ கெட்டப்பையே மாற்றி விடுவார் பாலா.
அந்த வகையில், இதற்கு முன்பு அவரது படங்களில் நடித்த விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால், அதர்வா, சசிகுமார் ஆகிய நடிகர்களை அவர்களே நினைத்துப்பார்க்காத அளவுக்கு வித்தியாசமாகக் காண்பித்தார் பாலா.
இந்த நிலையில், தற்போது அவர் தொடங்கியிருக்கும் ‘நாச்சியார்’ படத்தில் போலீஸ் வேடத்தில் ஜோதிகா நடிக்கிறார். ஆனால், கதையின் நாயகனாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் நெகடீவ் ரோலில் அதாவது சைக்கோ கொலையாளியாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதனால் இதுவரை காதல் நாயகனாக நடித்து வந்த ஜி.வி.பிரகாஷை ‘நாச்சியார்’ படத்தில் படு பயங்கரமான தோற்றத்தில் படமாக்கப்போகிறார் இயக்குனர் பாலா.