ஆப்நகரம்

கதையைக் கேட்ட பிறகு தெறித்து ஓடிய நதியா!

விஜய் சேதுபதி நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்திலிருந்து நதியா விலகியுள்ளார்.

samayam Tamil 15 Jan 2018, 7:43 am
விஜய் சேதுபதி நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்திலிருந்து நதியா விலகியுள்ளார்.
Samayam Tamil nadhiya out from vijaysethupathi film
கதையைக் கேட்ட பிறகு தெறித்து ஓடிய நதியா!


ஆரண்ய காண்டம் புகழ், தேசிய விருது இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில், விஜய் சேதுபதியுடன் இணைந்து ஃபகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள், இயக்குனர் மிஷ்கின் ஆகியோர் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். முதல் முறையாக இப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ளார். இதில், விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் பெயர் ஷில்பா என்றும் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், இப்படத்திலிருந்து நடிகை நதியா விலகியுள்ளார். முதலில் கதையை கேட்காமல் படத்தில் நடிப்பதற்கு ஓகே சொன்ன நதியா, கதையை தெரிந்து கொண்ட பின்னர் என்னால், கொடூரமான வில்லியாக நடிக்க முடியாது என்று கூறி படத்திலிருந்து விலகியுள்ளாராம். மேலும், இது போன்ற படத்தில் நடித்தால் தன்னுடைய இமெஜ் கெட்டுப்போகும் என்று கூறி வருகிறாராம். இதன் காரணமாக இவருக்குப் பதிலாக ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், விஜய் சேதுபதிக்கு வில்லியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்