வானத்தை போல் உள்பட ஊமை விழிகள், உயர்ந்த உள்ளம், தேவர்மகன், முத்து போன்ற படங்களில் நடித்த தருமபுரியைச் சேர்ந்த நடிகர் ஜெயபால். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
கடந்த 1996ம் ஆண்டு நடிகை சுஹாசினி இயக்கிய இந்திரா படத்தில் நடித்த போது காலில் அடிபட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு கால் எடுக்கம்படி நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மற்றொரு காலும் செயலிழந்து விட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிட்டத்தட்ட ஆயிரம் படத்திற்கு மேல் நடித்தும் வாழ்வதற்கு வழியின்றி தவிக்கும் தமக்கு தமிழக அரசோ அல்லது நடிகர் சங்கமோ உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் ஜெயபால்.
கடந்த 1996ம் ஆண்டு நடிகை சுஹாசினி இயக்கிய இந்திரா படத்தில் நடித்த போது காலில் அடிபட்டுள்ளது. இதன் காரணமாக ஒரு கால் எடுக்கம்படி நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது மற்றொரு காலும் செயலிழந்து விட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கிட்டத்தட்ட ஆயிரம் படத்திற்கு மேல் நடித்தும் வாழ்வதற்கு வழியின்றி தவிக்கும் தமக்கு தமிழக அரசோ அல்லது நடிகர் சங்கமோ உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் ஜெயபால்.