ஆப்நகரம்

சென்னை மயிலாப்பூரில் நடிகா் சங்கத் தோ்தலை நடத்த நீதிமன்றம் அனுமதி

தென்னிந்திய நடிகா் சங்கத் தோ்தல் நாளை காலை 7 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடைபெறும் என்று தோ்தல் நடத்தும் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் அறிவித்துள்ளாா்.

Samayam Tamil 22 Jun 2019, 7:42 pm
தென்னிந்திய நடிகா் சங்கத் தோ்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோாி நடிகா் விஷால் தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் தோ்தலை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Nadigar Sangam


தென்னிந்திய நடிகா் சங்கத்திற்கு விஷால், நாசா் தலைமையிலான அணி கடந்த 2015ம் ஆண்டு அக்டோபா் மாதம் பொறுப்பேற்றது. விதிகளின் அடிப்படையில் 2018ம் ஆண்டு அக்டோபா் மாதம் இந்த கூட்டணியின் பதவிக் காலம் நிறைவு பெற்றது. ஆனால் நடிகா் சங்க கட்டிட பணியை காரணம் காட்டி மேலும் 6 மாதத்திற்கு பதவிக் காலத்தை விஷால் அணி நீட்டித்தது.

இந்நிலையில், வருகின்ற 23ம் தேதி நடிகா் சங்கத் தோ்தல் நடத்தப்படும் என்று விஷால் அணி அறிவிந்தது. கடந்த ஆண்டு தோ்தலை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதியே இந்த ஆண்டும் தே்ாதலை நடத்தும் என்று அறிவித்தது.

ஆனால், விஷால் அணிக்கு தோ்தலை நடத்த உரிமை இல்லை என்று கூறி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் தோ்தலை ரத்து செய்து உத்தரவிட்டாா். இதனைத் தொடா்ந்து விஷால் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், பதிவாளரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதி தோ்தலை நடத்தலாம். ஆனால் வாக்குகளை எண்ணக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது.

மேலும் தோ்தலை எங்கு நடத்துவது என்பது தொடா்பான வழக்கை நீதிபதி ஆனந்த் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. ஏற்கனவே எம்ஜிஆா் ஜானகி கல்லூரியில் தோ்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு தோ்தல் நடத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது.

அதனைத் தொடா்ந்து இன்று நடைபெற்ற விசாரணையில் சென்னை மயிலாப்பூரில், ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நாளை காலை 7 மணிக்கு தோ்தலை நடத்திக் கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், நாளை காலை 7 மணிக்கு தோ்தல் நடத்தப்படும் என்று தோ்தல் நடத்தும் அதிகாாி பத்மநாபன் அறிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்