ஆப்நகரம்

தனியார் பேருந்துகளில் நடிகர் சங்கம் அதிரடி நடவடிக்கை

தனியார் பேருந்துகளில் புதுபடம் திரையிடுவதற்கு நடிகர் சங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

TOI Contributor 20 May 2016, 6:52 pm
தனியார் பேருந்துகளில் புதுபடம் திரையிடுவதற்கு நடிகர் சங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
Samayam Tamil nadigar sangams timely action saves manithan from piracy menace
தனியார் பேருந்துகளில் நடிகர் சங்கம் அதிரடி நடவடிக்கை


நாசர் தலைமையிலான நிர்வாகிகள் பொறுப்பேற்ற பிறகு நடிகர் சங்கம் பல்வேறு பிரச்சனைகளில் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக திருட்டு டிவிடிக்கு எதிராக தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

தனியார் பேருந்துகளில் புதுப்படங்கள் திரையிடுவது தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. அதற்கு எதிராக கடும் நடவடிக்கையில் நடிகர் சங்கம் இறங்கியுள்ளது. ‘தெறி’ படத்தை திரையிட்ட தனியார் தளனியார் பேருந்தை மடக்கி காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

‘மனிதன்’ படத்தை தனியார் பேருந்து ஒன்றில் திரையிடுவதாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில் நடிகர் ஸ்ரீமன் தலைமையில் சிலர் அப்பேருந்தை சென்னை மதுரவாயல் பகுதியில் மடக்கிப் பிடித்தனர். பிறகு மதுரவாயல் காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கும் போடப்பட்டது. மே 20 வெளியாகும் தனது மருது படத்தின் திருட்டு டிவிடி வெளியானால், பார்த்துக் கொண்டிருப்பதில்லை, கடும் நடவடிக்கையில் இறங்குவேன் என்று விஷால் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்