ஆப்நகரம்

சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு இரு மொழிகளில் படமாகிறது

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படவுள்ளது.

TOI Contributor 2 Jun 2016, 6:27 pm
நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படமாக்கப்படவுள்ளது.
Samayam Tamil nag ashwins next a biopic on legendary actress savitri
சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு இரு மொழிகளில் படமாகிறது


நடிகை சாவித்திரி தமிழ், தெலுங்கு, இந்தி என 3000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் 1935-ம் ஆண்டு பிறந்த சாவித்திரி, 46-வது வயதில் 1981-ம் ஆண்டு மறைந்தார். ‘களத்தூர் கண்ணம்மா’, ‘திருவிளையாடல்’, ‘கந்தன் கருணை’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘மிஸியம்மா‘, ‘பரிசு’, ‘பாசமலர்’, ‘பாவ மன்னிப்பு‘, ‘கைகொடுத்த தெய்வம்’ போன்ற படங்கள் இவரின் நடிப்பை வெளிப்படுத்தின.

‘நடிகையர் திலகம்’ என்று போற்றப்பட்ட சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக உள்ளது. தெலுங்கு இயக்குநர் நாக் அஸ்வின், மகாநதி என்கிற பெயரில் எடுக்கிறார். சாவித்திரி வேடத்தில் நடிக்கும் நடிகைக்காக தேர்வு நடைபெற்று வருகிறது.

இப்படம் குறித்து நாக் அஸ்வின் கூறுகையில் ‘‘சாவித்திரியின் வாழ்க்கை மகிழ்ச்சியும் துயரமும் நிறைந்தவை. சாவித்திரி போல நடிக்கவேண்டும் என்று இன்றைய நடிகைகள் கூறுவதிலிருந்தே அவர் திறமையையும் பங்களிப்பையும் அறிய முடியும். அவர் வாழ்க்கையைப் படமாக எடுத்தால் அதை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்று இந்த முயற்சியை மேற்கொள்கிறேன். சாவித்திரி தொடர்பான புத்தகங்களையும் அவருக்கு நெருக்கமானவர்களிடம் பேசியும் தகவல்கள் திரட்டி வருகிறேன். படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்’’ என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்