ஆப்நகரம்

Manmadhudu 2: யார், என்ன பேசினாலும் எனக்கு கவலையில்லை: ரகுல் ப்ரீத் சிங்!

யார் என்ன பேசினாலும் எனக்கு கவலையில்லை என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 19 Jul 2019, 6:10 pm
“மன்மதடு 2” படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்திருக்கிறார் ரகுல் பிரீத் சிங். அப்படத்தில் சிகரெட் புகைக்கும் காட்சியில் நடித்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட தகவலின் படி கதைக்காகவும் கதாபாத்திரத்திற்காகவும் தான், தான் சிகரெட் பிடித்தேன். கதைப்படி என்ன தேவைப்படுகிறதோ அதை நிச்சயமாக செய்வேன் என்று தெளிவாகவும் திட்டவட்டமாகவும் கூறியுள்ளார்.
Samayam Tamil rakul


தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று பிசியாக இருக்கும் நடிகை ரகுல். இவர் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தனக்கு பிடித்தமான கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வரும் இவர் தற்பொழுது “மன்மதடு 2” என்ற தெலுங்கு படத்தில் நாகர்ஜுனாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். “மன்மதடு 2” படப்பிடிப்பு முடிந்த வேளையில் அதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டுக்களை பெற்றுள்ளது. ஆனால் ஒரு சில ரசிகர்கள் ரகுல் பிரீத் சிங்கை மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

Suriya: வெளிநாடு வியாபாரதில் பட்டைய கிளப்பிய சூர்யாவின் காப்பான்: எத்தனை கோடி தெரியுமா?

டீசர் முடிவின் பொழுது ரகுல் புகை விடுவது போல் ஒரு காட்சி அமைக்கப் பட்டிருந்தது. இதை கண்டித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. பாரம்பரியம், கலாச்சார சீர்கேடு என்று நெட்டிசன்கள் கொதித்து எழுந்துள்ளனர். தமிழில் ஓவியா நடிப்பில் வெளியான “90ml” மற்றும் அமலா பால் நடித்து வெளிவர இருக்கும் “ஆடை படத்திற்கும் இதே விமர்சனம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் ரகுலின் “மன்மதடு 2” படமும் சேர்ந்து விட்டது.

Vikram: ஐ படத்திற்கு பிறகு மாஸ் காட்டிய விக்ரம்: கடாரம் கொண்டானை கொண்டாடிய ரசிகர்கள்!

Amala Paul: ஆடையால் ஏமாந்த அமலா பால்: ஏன் தாமதம்? நிர்வாண காட்சியா? நிதி பிரச்சனையா?

ஆனால் நடிகை ரகுல் பிரீத் சிங், மற்றவர்கள் பேசுவது குறித்து தனக்கு கவலையில்லை, பேசுபவர்கள் எப்போதும் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். ஏனென்றால் அவர்களுக்கு பேசுவது மட்டும்தான் வேலை. என்னை பற்றி யார் என்ன பேசினாலும் கவலயில்லை என் வேலையை நான் செய்து கொண்டுதான் இருப்பேன் என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்