‘மகாபாரதம்’ மெகா பட்ஜெட் படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா கர்ணனாக நடிக்கவுள்ளார்.
‘பாகுபலி2’ படம் சமீபத்தில் வெளியாகி ரூ.1500 கோடிக்கும் மேல் வசூலாகி இந்திய சினிமாவில் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில், மகாபாரத கதை ரூ.1000 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளது. இப்படத்தை வி.ஏ.ஸ்ரீகுமார் இயக்குகிறார்.
இப்படத்திற்கான கதை, திரைக்கதையை பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதுகிறார். இந்த சரித்திர படத்தில் நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பல நடிகர்களும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் துரியோதனின் நண்பனான கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவிடம் பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. இதை நாகார்ஜூனாவும் உறுதி செய்துள்ளார். விரைவில் நாகார்ஜூனா அந்தப் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.
‘பாகுபலி2’ படம் சமீபத்தில் வெளியாகி ரூ.1500 கோடிக்கும் மேல் வசூலாகி இந்திய சினிமாவில் புதிய சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில், மகாபாரத கதை ரூ.1000 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளது. இப்படத்தை வி.ஏ.ஸ்ரீகுமார் இயக்குகிறார்.
இப்படத்திற்கான கதை, திரைக்கதையை பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதுகிறார். இந்த சரித்திர படத்தில் நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பல நடிகர்களும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் துரியோதனின் நண்பனான கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க, தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவிடம் பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது. இதை நாகார்ஜூனாவும் உறுதி செய்துள்ளார். விரைவில் நாகார்ஜூனா அந்தப் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.