ஆப்நகரம்

திருமணத்துக்குப் பின் எல்லோரையும் ‘பொட்டு’ வடிவில் மிரட்ட வருகிறார் நடிகை நமீதா!

திருமணத்துக்குப் முன்பு நடிகை நமீதா நடிப்பில் உருவான ‘பொட்டு’ என்ற படம் வரும் மே 25ல் வெளியாகவுள்ளது.

Samayam Tamil 15 May 2018, 5:24 pm
திருமணத்துக்குப் முன்பு நடிகை நமீதா நடிப்பில் உருவான ‘பொட்டு’ என்ற படம் வரும் மே 25ல் வெளியாகவுள்ளது.
Samayam Tamil pottu


நடிகை நமீதாவுக்கும், வீர் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருப்பதில் திருமணம் நடைபெற்றது. தற்போது நடிகை நமீதா கணவருடன் ஐதராபாத்தில் வசித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்தான் இவருக்கு திருமணம் நடைபெற்றது. ஒரு காலகட்டத்தில் நமீதா தமிழ் சினிமாவில் வரிசையாக பல படங்களில் நடித்து வந்தார். பின் அவரது உடலில் மாற்றம் ஏற்பட்டதால் படங்களின் வாய்ப்பு குறையத் தொடங்கியது. இருந்தாலும் அவர் ஒரு சில மலையாளப் படங்களில் நடித்து வந்தார். மோகன்லாலுடன் ‘புலிமுருகன்’ படத்தில் நடித்ததால் அவருக்கு சில மாற்றம் வந்தது.

இந்நிலையில் அவர் இதுவரை நடித்திராத கேரக்டரான அகோரி வேடத்தில் ‘பொட்டு’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் தயாராகி ஒரு வருடமாக முடங்கிக் கிடந்தது. இந்தப் படத்தை வடிவுடையான் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், பரத், இனியா, ஆகியோருடன் நடிகை நமீதா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்