ஆப்நகரம்

சப்தமில்லாமல் நடந்து வரும் ‘நான் மகான் அல்ல 2

சப்தமில்லாமல் சுசீந்திரன் இயக்கத்தில் ‘நான் மகான் அல்ல 2’ படத்தின் படப்படிப்பு தற்போது நடந்து வருகிறது.

TNN 20 Feb 2017, 3:30 am
சப்தமில்லாமல் சுசீந்திரன் இயக்கத்தில் ‘நான் மகான் அல்ல 2’ படத்தின் படப்படிப்பு தற்போது நடந்து வருகிறது.
Samayam Tamil nan mahan alla 2 shooting
சப்தமில்லாமல் நடந்து வரும் ‘நான் மகான் அல்ல 2


இயக்குனர் சுசீந்திரன் ‘மாவீரன் கிட்டு’ படத்திற்குப் பிறகு தற்போது ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கி வருகிறார். அதில் ஒரு படம் ‘அறம் செய்து பழகு’. இந்த படத்தில் விக்ராந்த், தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் இணைந்து நடித்து வருகின்றனர்.

தெலுங்கு நடிகை மெஹ்ரின் பிர்ஷதா நாயகியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிறது. அறம் செய்து பழகு படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்று இறுதிகட்ட பணிகள் நடக்கிறது.

இந்த நிலையில், சுசீந்திரன் இயக்கத்தில் இன்னொரு படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. அப்படத்தில் நான்கு இளைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அந்த படம் குறித்து விசாரித்தபோது, ஏற்கனவே கார்த்தியை வைத்து தான் இயக்கிய ‘நான் மகான் அல்ல’ படத்தின் இரண்டாம் பாகமாக இப்படத்தை இயக்குகிறாரம் சுசீந்திரன். இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சினை அடிப்படையில் இப்படம் உருவாகிறதாம்.

nan mahan alla -2 shooting

அடுத்த செய்தி

டிரெண்டிங்