ஆப்நகரம்

நடிகர் நானா படேகர் மீது நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்கு!

நடிகை தனுஸ்ரீ தத்தா கொடுத்த புகாரால் நடிகர் நானே படேகர் மீது போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Samayam Tamil 9 Oct 2018, 3:46 pm
கடந்த 2008ம் ஆண்டு, நடிகை தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் உட்பட பலர் நடிப்பில் ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ என்ற இந்தி படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. படப்பிடிப்பின் போது நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா போலீசில் புகார் அளித்தார். இதற்கு உடந்தையாக இருந்த நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா மீதும் பாலியல் புகார் கொடுத்தார் நடிகை தனுஸ்ரீ தத்தா. இந்த பாலியல் புகார் சம்பவம் பாலிவுட் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Tanushree-nana


மேலும் மற்றொரு சம்பவத்தில் டைரக்டர் விவேக் அக்னிகோத்ரி ‘சாக்லேட்’ படத்தின் படப்பிடிப்பில் என்னை நிர்வாணமாக வந்து நிற்கும்படி கூறினார். ஆகையால் அவர் மீதும் தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் கூறினார்.

இந்த நிலையில் நடிகை தனுஸ்ரீ தத்தா மும்பை ஓஸிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நானா படேகர், கணேஷ் ஆச்சார்யா, தயாரிப்பாளர் சமீர் சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங், மராட்டிய நவ நிர்வான் சேவா கட்சி நிர்வாகிகள் ஆகியோர்மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து இருப்பதாக தனுஸ்ரீ தத்தா கூறினார்.

தனுஸ்ரீதத்தா அளித்த புகாரின் பேரில் நானா படேகர் மீது 354 (மான பங்கம் செய்தல்) 354(ஏ), 34 மற்றும் 509 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்