ஆப்நகரம்

மீண்டும் போலீஸாக நடிக்கும் அதர்வா: வில்லனாக முன்னணி நடிகர் ஒப்பந்தம்

அதர்வா தற்போது போலீசாக நடித்துவரும் திரில்லர் படத்தில் வில்லனாக நடிகர் நத்தா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

Samayam Tamil 20 Mar 2020, 10:08 am
சமீபத்தில் வெளியான வானம் கொட்டட்டும் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தவர் நடிகர் நந்தா. அவரது நடிப்புக்கு நல்ல பாராட்டும் கிடைத்திருந்தது. இயக்குனர் மணிரத்தினம் தான் இந்த படத்தினை தயாரித்திருந்தார்.
Samayam Tamil Atharvaa


இந்நிலையில் நந்தா அடுத்து ஒரு படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதர்வா போலிஸாக நடிக்கும் படத்தில் நந்தா வில்லனாக நடிக்கவுள்ளார். ரவீந்திர மாதவா இயக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் துவங்கியது. தற்போது கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஷூட்டிங் துவங்கும்போது நந்தா கலந்துகொள்கிறார்.

நந்தா பற்றி பேசிய இயக்குனர்ரவீந்திர மாதவா "நான் முதலில் அவரிடம் சென்று பேசியபோது, ஹீரோ கதாபாத்திரமா அல்லது வில்லன் கதாபாத்திரமா என கேட்கவில்லை . அவர் 'நான் ஏன் இந்த ரோலில் நடிக்கவேண்டும்?' என்று தான் கேட்டார். கதை கேட்டால் உங்களுக்கு புரியும் என கூறி கதையை கூறினேன். அவர் கதை கேட்டுவிட்டு பின்னர் நடிக்க ஒப்புக்கொண்டார்."

"நந்தாவுக்கு வழக்கமான வில்லன் கதாபாத்திரம் கிடையாது. அவர் யார், ஏன் இப்படியெல்லாம் செய்கிறார் என ஹீரோவை குழப்பும் அளவுக்கு வித்யாசமான ரோலாக அது இருக்கும்" என கூறியுள்ளார்.

அதர்வா போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்கிறார். ஹீரோயின் லாவண்யா திரிபாதி IASக்கு தயாராகும் பெண்ணாக நடிக்கிறார். அவர்களின் காட்சிகள் மட்டும் தற்போது வரை எடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தினை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார். அதர்வாவின் முந்தைய போலீஸ் படமான 100 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து ஆர்.கண்ணன் இயக்கத்தில் தள்ளி போகாதே என்ற படத்திலும் அதர்வா தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்