ஆப்நகரம்

கொரோனா தொற்று: 1.25 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கிய பாலகிருஷ்ணா

கொரோனா வைரஸுக்கு எதிராக போராட அரசுக்கு நிதி உதவியை வழங்கியுள்ளார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா

Samayam Tamil 3 Apr 2020, 1:25 pm
உலகத்தை புரட்டி போட்டுள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
Samayam Tamil Nandamuri Balakrishna


தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுளளவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் 2301ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் கொரோனா பற்றிய அச்சம் அதிகரிக்க காரணமாகி உள்ளது.

மேலும் கொரோன மிக தீவிரமாக பரவுவதை தடுக்க மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. அரசுக்கு உதவும் விதமாக மக்கள் நிதி உதவி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அதை ஏற்று பல பிரபலங்கள் நிதி உதவி வழங்கி வருகின்றனர். பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் 25 கோடி ரூபாய் உதவி தொகை அளித்தார். அதை தொடர்த்து மேலும் பல நடிகர்கள் நிதி அளித்து வருகின்றனர்.

தற்போது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா 1.25 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துளளார். 50 லட்சம் ரூபாயை ஆந்திர மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கும், மேலும் 50 லட்சம் ரூபாயை தெலுங்கானா மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் அளித்துள்ளார்.

மேலும் கொரோனாவால் வேலை இழந்து இருப்பவர்களுக்கு உதவும் விதமாக 25 லட்சம் ரூபாயை பாலகிருஷ்ணா அளித்துள்ளார். Corona Crisis Charity (CCC) என்ற அமைப்புக்கு 25 லட்ச ரூபாய்க்கான செக்கை வழங்கியுள்ளார் பாலகிருஷ்ணா.

அதன் புகைப்படங்களும் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்