ஆப்நகரம்

ஹீரோவுக்கு வில்லியான நந்திதா

நடிகை நந்திதா, ஹீரோவை எதிர்க்கும் வில்லியாக படத்தில் நடித்திருக்கிறாராம்.

TOI Contributor 4 Jul 2016, 7:28 pm
நடிகை நந்திதா, ஹீரோவை எதிர்க்கும் வில்லியாக படத்தில் நடித்திருக்கிறாராம்.
Samayam Tamil nanditha plays neagative role
ஹீரோவுக்கு வில்லியான நந்திதா


சமீபத்தில் வெளியான பல பேய்ப்படங்கள் தோல்வியடைந்து வருகின்றன. இந்நிலையில், இயக்குனர் செல்வராகவனும் தன் பங்குக்கு ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற பேய்ப்படத்தை இயக்கி வருகிறார். இயக்குர் ஸ்ரீதரின் காலத்தால் அழிக்க முடியாத படத்தின் தலைப்பை தான் இயக்கும் பேய்ப்படத்துக்கு சூட்டி இருக்கிறார்.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது டப்பிங், ரீரெகார்டிங் போன்ற போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் நெஞ்சம் மறப்பதில்லை படம் குறித்து தற்போது சில தகவல்கள் கிடைத்துள்ளன. எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் ‘மரியம்‘ என்ற குழந்தை பராமரிப்பாளர் கேரக்டரில் நடிக்கிறார் ரெஜினா. வில்லியாக நந்திதா நடித்திருக்கிறாராம். அதுமட்டுமில்லாமல், எஸ்.ஜே.சூர்யாவுக்கும், நந்திதாவுக்கும் இடையே நடைபெறும் சண்டைக்காட்சிகள் ரசிகர்களை நடு நடுங்க வைக்கும் அளவுக்கு படமாக்கப்பட்டுள்ளதாம்.

செல்வராகவனின் முதல் பேய்ப்படம் என்பதால் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் பல புதிய விஷயங்களை எதிர்பார்க்கலாம்! என்கிறார்கள் செல்வராகவன் யூனிட்டைச் சேர்ந்தவர்கள்.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்