ஆப்நகரம்

சர்ச்சையில் புது ட்விஸ்ட்.. வனிதாவிடம் மன்னிப்பு கேட்ட நாஞ்சில் விஜயன்

தொடர்ந்து சர்ச்சை புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், வனிதாவுவுக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டிருக்கிறார் நாஞ்சில் விஜயன்.

Samayam Tamil 3 Aug 2020, 12:21 pm
வனிதா விஜயகுமார் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட பிறகு பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டன. பீட்டர் பால் அவரது முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே மீண்டும் திருமணம் செய்து கொண்டார் என புகார் அளிக்கப்பட்டது. அதனால் வனிதா மீது அதிக விமர்சனங்கள் எழுந்தது.
Samayam Tamil Vanitha and Nanjil Vijayan


கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சூர்யா தேவி மற்றும் விஜய் டிவி புகழ் நாஞ்சில் விஜயன், தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் வனிதா பற்றி விமர்சித்ததால் அவர்களுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார் வனிதா.

அதன் பிறகு வனிதா சூர்யா தேவி பற்றி போலீசில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து சூர்யா தேவி கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மேலும் நாஞ்சில் விஜயன் சமூக வலைதளங்களில் வனிதா பற்றி தொடர்ந்து பதிவிட்டு வந்தார். வனிதாவின் சர்ச்சையான பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து அவர் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் நேற்று நாஞ்சில் விஜயன் மற்றும் சூர்யா தேவி இருவரும் மது அருந்துவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் வனிதா. இந்நிலையில் நாஞ்சில் விஜயன் வனிதாவுக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டிருக்கிறார். இந்த தகவலை வனிதாவை ட்விட்டரில் கூறியிருக்கிறார்.

"நாஞ்சில் விஜயன் என்னை அழைத்திருந்தார். முதலில் இருந்து நடந்த அனைத்தைப் பற்றியும் அவர் கூறினார். அவரை நான் சந்தித்தது கூட இல்லை என்பதால் எங்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியாது, அதனால் எங்களுக்கு நடுவில் எந்த பிரச்சனையும் இல்லை. இத்தனை குழப்பத்திற்கு சூர்யா தேவி தான் காரணம். கஸ்தூரி வழக்கம்போல இந்த சூழ்நிலையை தவறாக பயன்படுத்தி அவரை பிரச்சனைக்குள் கொண்டு வந்து விட்டார். இவருடைய லைவ் வீடியோவில் பேச வைத்து இப்படி செய்தார் அவர். நாஞ்சில் விஜயன் அவருடைய சேனலில் தவறான பப்ளிக் ஓபினியன் வீடியோக்களை பதிவிட்டது தொடர்பாக வருத்தம் தெரிவித்தார். அவருக்கு சம்பந்தமே இல்லாத ஒரு பிரச்சனை பற்றி நான் அவர் மீது புகார் கூறியதால் கோபம் வந்ததாக அவர் கூறினார். நடுவில் இருக்கும் சிலர் தான் இப்படி விளையாடி அவரை பிரச்சனைக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். அவரது மன்னிப்பை நான் ஏற்றுக் கொண்டு விட்டேன். ஏனென்றால் அவர் தேவையில்லாமல் இந்த சர்ச்சையில் இருக்க விரும்பவில்லை. அவர் ஒரு இளம் டேலண்ட். அவரது வளர்ச்சியை அது பாதிக்கும். அவர் எந்த தவறும் செய்யாத நிலையில் அவரை பற்றி குறை கூறுயதற்காக நான் வருத்தப்படுகிறேன்."


"மேலும் அவரது வீடியோ பற்றி நான் என் தரப்பு வருத்தத்தை தெரிவித்தேன். அவற்றை உடனே நீக்கி விடுவதாக அவர் கூறினார். மேலும் இவற்றைப் பற்றி விளக்கம் கூறி ஒரு புதிய வீடியோ வெளியிடுவதாகவும் தெரிவித்திருக்கிறார். இரண்டு நபர்களுக்குள் பிரச்சனை என்றால் அதை அவர்கள் நேரடியாக பேசிக் கொள்ள வேண்டும். மூன்றாவதாக ஒருவர் வந்தால் பிரச்சனை நம் கையை விட்டுப் போய்விடும். அடுத்தவர்கள் பிரச்சனை பற்றி விசாரணை நடத்துவதை நிறுத்துங்கள். அதை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். ஒரு பிரச்சனையில் வழக்கறிஞர் அல்லது நீதிபதியாக செயல்பட நினைப்பது இந்த பிரச்சனை பெரிதாகும். இறுதியில் அந்த பிரச்சனையை அவர்களே பேசி தீர்த்துக் கொண்டால் ,அந்த மூன்றாவது மனிதர் முட்டாள் ஆகிவிடுவார்" என வனிதா விஜயகுமார் குறிப்பிட்டிருக்கிறார்.


அடுத்த செய்தி

டிரெண்டிங்