ஆப்நகரம்

மீண்டும் இணைந்த ‘நரகாசூரன்’ கூட்டணி!

சென்னை: ‘நரகாசூரன்’ படம் வெளிவதற்கு முன்பே அந்தப் படத்தின் கூட்டணி வேறு ஒரு படத்திற்கு இணைந்துள்ளது.

Samayam Tamil 17 Nov 2018, 7:01 pm
’துருவங்கள் 16’ என் வெற்றிப்படத்தை தந்தவர் கார்த்திக் நரேன். இந்தப் படத்தை அடுத்து அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா உள்ளிட்ட பலரையும் இணைத்து ‘நரகாசூரன்’ என்ற படத்தை இயக்கினார்.
Samayam Tamil Naragasooran.


இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து, படத்தை வெளியிடும் சமயத்தில் சிக்கல் வந்துள்ளது. பலமுறை வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டும் பின்னர் நின்று போகிறது.

இந்நிலையில், தற்போது மீண்டும் அரவிந்த்சாமி - கார்த்திக் நரேன் கூட்டணியில் புதிய படம் உருவாகிறது. இந்த புதிய படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது இதற்கான படப்பிடிப்பு இடங்களை கண்டுபிடித்து தேர்வு செய்து வருகிறார் இயக்குனர் கார்த்திக் நரேன்.

’நரகாசூரன்’ படத்தைத் தொடர்ந்து ‘நாடகமேடை’ என்னும் படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார் கார்த்திக் நரேன்.

தற்போதுள்ள நிலவரப்படி லைகா படத்தை முடித்துவிட்டுத் தான் ‘நாடகமேடை’ படத்தை இயக்குவார் என தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்