ஆப்நகரம்

சரத்குமார், ராதாரவி மீது பணமோசடி வழக்கு

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பண மோசடி செய்ததாக முன்னாள் தலைவர் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் உள்ளிட்ட 3 பேர் மீதும் நடிகர் சங்கத் தலைவர் நாசர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

TNN 12 Sep 2016, 12:56 pm
சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பண மோசடி செய்ததாக முன்னாள் தலைவர் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் உள்ளிட்ட 3 பேர் மீதும் நடிகர் சங்கத் தலைவர் நாசர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
Samayam Tamil nasser files money laundering case against sarathkumar radharavi
சரத்குமார், ராதாரவி மீது பணமோசடி வழக்கு


தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மாதாந்திர செயற்குழுக் கூட்டம் சென்னை தியாகராயா நகரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நடிகர் சங்க கணக்கு வழக்குகளை ஆய்வு செய்ததில் முன்னாள் நிர்வாகிகள் ரூ.1.65 லட்சம் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார், வாகை சந்திரசேகர், ராதா ரவி ஆகியோரை தற்காலிகமாக நீக்கம் செய்து செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.

இந்நிலையில், ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் சங்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் உள்ளிட்ட 3 பேர் மீதும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பண மோசடி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அம்மனுவில், நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் ரூ.1.65 லட்சம் கையாடல் செய்துள்ளனர். இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் போலீசாரிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நாசர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்