ஆப்நகரம்

தேசிய விருது தொடர்பான சர்ச்சை: நடிகர் கமல்ஹாசன் சொன்னது இதுதான்

தேசிய விருது தொடர்பான சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

TNN 15 Apr 2017, 9:24 am
சென்னை: தேசிய விருது தொடர்பான சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
Samayam Tamil national award could be good or bad says actor kamalhassan
தேசிய விருது தொடர்பான சர்ச்சை: நடிகர் கமல்ஹாசன் சொன்னது இதுதான்


2016ஆம் ஆண்டு வெளியான படங்களில் சிறந்தவற்றிற்கான தேசிய விருதுகள், கடந்த 7ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 64வது ஆண்டாக அறிவிக்கப்பட்ட விருது பட்டியலில் சிறந்த படமாக ஜோக்கர் கூறப்பட்டது. மேலும் எழுத்தாளர் தனஞ்செயன், பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்டோருக்கு அறிவிக்கப்பட்டன. இதுதொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தேசிய விருதுகள் அறிவிப்பு ஒருதலைபட்சமானது என்று குறிப்பிட்டார். அதற்கு தேர்வு குழுவில் இருந்த பிரியதர்ஷன் பதிலளித்தார். இதைத்தொடர்ந்து மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் டிவிட்டரில் பதிவிட்டார்.

அதில் தேசிய விருதுகள் குறித்து நான் கூறியது என்னுடைய கருத்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கருத்து. வீணாக விவாதம் செய்வதை விட்டுவிட்டு உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள் என்று குறிப்பிட்டார். இந்நிலையில் இந்த சர்ச்சை விவகாரம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசனிடம் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், 12 பேர் முடிவு செய்தது. அதில் நல்லது இருக்கலாம். கெட்டதும் இருக்கலாம் என்று குறிப்பிட்டார். அதன்மூலம் விருதுகள் அறிவிக்கப்பட்டதில் பாரபட்சம் நிலவுவது தெளிவாக தெரிகிறது.

National Award could be good or bad says Actor KamalHassan.

அடுத்த செய்தி

டிரெண்டிங்