ஆப்நகரம்

கொடைக்கானலில் கீர்த்தி சுரேஷ்: புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 13 Sep 2019, 11:58 pm
ரஜினிகாந்திற்கு பேட்ட படத்தை கொடுத்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். ஒரு இயக்குநர் மட்டுமல்லாமல் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்துள்ளார். சூது கவ்வும் படத்தில், ஜக்குவார் கார் ஓனராக நடித்துள்ளார். அவியல், மேயாத மான், கள்ளச்சிரிப்பு (வெப் சீரிஸ்) ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.
Samayam Tamil Keerthy Suresh


இந்த நிலையில், இப்படங்களைத் தொடர்ந்து தனது ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இப்படத்தில், தெலுங்கில் வெளியான மகாநடி படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இது இவரது 24 ஆவது படம். இப்படத்தை அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நேற்று தொடங்கியது. வரும், 2020 ஆம் ஆண்டு இப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ், விஜய்யுடன் இணைந்து நடித்த சர்கார் படம் கடந்தாண்டு வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் மன்மதுடு 2 படம் வெளியானது. இதில், சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் அறிமுக இயக்குனர் நரேந்திரநாத் இயக்கும் மிஸ் இந்தியா படத்திலும் , பாலிவுட்டில் அஜய் தேவ்கன் நடிக்கும் மைதான் படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பது குறிப்பிடத்தக்க்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்