ஆப்நகரம்

தேசிய விருது வழங்கும் விழாவை புறக்கணித்த 60 கலைஞர்களின் இருக்கை நீக்கம் !

தேசிய விருது வழங்கும் வழங்கும் விழாவில் கலந்து கொள்ளாத கலைஞர்களின் இருக்கை நீக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 3 May 2018, 6:32 pm
தேசிய விருது வழங்கும் வழங்கும் விழாவில் கலந்து கொள்ளாத கலைஞர்களின் இருக்கை நீக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil 117720


திரைப்படத்துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தேசிய விருது வழங்கி மத்திய அரசு கௌரவப்படுத்தி வருகிறது. இந்த விருதுகளை வெல்லும் கலைஞர்களுக்கு, குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்குவார். இந்தாண்டு தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது.

ஆனால், குடியரசுத் தலைவர் சிறந்த படம், சிறந்த இசை, தாதா சாகேப் பால்கே ஆகிய விருதுகள் உட்பட 11 விருது பெறுபவர்களுக்கு மட்டுமே நேரடியாக விருதுகளை வழங்குவார் எனவும், மீதம் உள்ளவர்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி ஈரானி விருதுகளை வழங்குவார் என அறிவிக்கப்பட்டது. மேலும் குடியரசுத் தலைவருக்கு நேரம் இல்லை என்பதால் 11 பேருக்கு மட்டும் விருதுகள் வழங்குவார் என்று கூறப்பட்டது.

இதனால்சுமார் 60 கலைஞர்கள் இன்று நடக்கும் தேசிய விருதுவழங்கும் விழாவைப் புறக்கணிக்க முடிவு செய்தனர். தேசிய விருது வழங்கும் வரலாற்றில் இதுவரை குடியரசுத்தலைவர் அல்லாத வேறு ஒருவர் விருது வழங்கியது கிடையாது. இதனால் இந்த அறிவிப்பை எதிர்த்து மலையாள நடிகர் பகத் பாசில் , தமிழ் திரைக்கலைஞர்கள் உள்பட 60 பேர் தேசிய திரைப்படவிழாவை புறக்கணிப்பதாக அறிவித்தனர்.

இந்நிலையில் தேசிய விருது வழங்கும் விழாவை புறக்கணித்தவர்களின் இருக்கை நீக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து, மாம் படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான விருது பெற்ற மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சார்பில், அவரது கணவர் போனி கபூர் மற்றும் அவரது மகள்கள் ஜான்வி மற்றும் குஷி கபூர் விருதை பெற்றுக் கொண்டனர்.

இது தொடர்பாக தேசியவிருது வழங்கும் விழாவை புறக்கணித்த 60 கலைஞர்கள் கூறுகையில், ''இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவமாகவே தெரிகிறது. முதல் முறையாக ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து ஒருவர் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் கையிலிருந்து விருதுகள் வாங்க, நாங்கள் கனவோடு இருந்தோம். நாங்கள் தேசிய விருதுகளை புறக்கணிக்கவில்லை. ஆனால் தேசிய திரைப்பட விருது வழங்கும்விழாவைத்தான் புறக்கணிக்கிறோம். பல ஆண்டு வரலாற்றை மாற்றும் முயற்சியே இது'' என்றனர்.

மேலும் இது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா கூறுகையில், ''குடியரசுத் தலைவர் தலித் என்பதால் மட்டுமே அவரை ஒதுக்குவது மிகவும் மோசமான செயல். விழாவை புறக்கணித்த கலைஞர்களின் இருக்கையை நீக்கியது மேலும் அதிர்ச்சியை அளிக்கிறது. இதுபோன்று செயல் சர்வதிகார ஆட்சியிலும் நடைபெறாது'' என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்