ஆப்நகரம்

பேரரசுடன் கைகோர்க்கும் நட்டி என்கிற நடராஜ்

நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி என்கிற நடராஜ் டைரக்டர் பேரரசுடன் ஒரு படத்தில் இணையவுள்ளார்.

TOI Contributor 23 May 2016, 7:45 pm
நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி என்கிற நடராஜ் டைரக்டர் பேரரசுடன் ஒரு படத்தில் இணையவுள்ளார்.
Samayam Tamil natraj subramaniam joins with director perarasu
பேரரசுடன் கைகோர்க்கும் நட்டி என்கிற நடராஜ்


‘புதிய கீதை’, ‘உதயா’ உள்ளிட்ட ஒரு சில படங்கள் விஜய்க்கு கைகொடுக்காத போது, தன் இயக்கத்தின் மூலம் கைகொடுத்தவர் இயக்குனர் பேரரசு.

இவரின் இயக்கத்தில் வெளியான ‘திருப்பாச்சி’ மற்றும் ‘சிவகாசி’ ஆகிய படங்கள் விஜய்க்கு மாஸ் படங்களாக அமைந்தன. அதன்பின்னர் அஜீத்தை வைத்து ‘திருப்பதி’ என்ற படத்தையும் இயக்கினார்.

கடந்த 2015 ஆண்டு மலையாளத்தில் ஒரு படத்தையும் இயக்கினார். தற்போது, ‘வாடா மகனே’ என்றொரு படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதவிருக்கிறாராம். இப்படத்தை வினோத் குமார் இயக்க, ஒளிப்பதிவாளர் நட்டி என்ற நட்ராஜ் நாயகனாக நடிக்கிறார்.

இவர் விஜய் நடித்த ‘புலி’ படத்தின் ஒளிப்பதிவாளர். கவிபாரதி கிரியேஷன்ஸ் இப்படத்தை தயாரிக்க, கவிஞர் பிறைசூடனின் மகன் கவின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். தற்போது படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்