ஆப்நகரம்

தனி விமானத்தில் ஜோடியாக வந்திறங்கிய நயன்தாரா-விக்னேஷ் சிவன்! - வைரல் போட்டோஸ்

கோவாவுக்கு சுற்றுலா சென்று இருந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தற்போது தனி விமானத்தில் சென்னைக்கு திரும்பி இருக்கிறார்கள்.

Samayam Tamil 22 Sep 2020, 11:48 am
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த சில நாட்களாக கோவாவில் தங்கள் நேரத்தினை செலவிட்டு வருகின்றனர். அதன் புகைப்படங்களையும் அவர்கள் வெளியிட்ட நிலையில் இணையத்தில் அவை அதிகம் வைரல் ஆகி இருந்தது.
Samayam Tamil nayanthara and vignesh shivan return to chennai in private jet
தனி விமானத்தில் ஜோடியாக வந்திறங்கிய நயன்தாரா-விக்னேஷ் சிவன்! - வைரல் போட்டோஸ்


ஒரு வாரத்திற்கு முன்பு நயன்தாராவின் அம்மா பிறந்தநாளை அவர்கள் கோவாவில் கொண்டாடிய நிலையில் சென்ற 18ஆம் தேதி விக்னேஷ் சிவன் பிறந்த நாளை கொண்டுவதற்காக நயன்தாரா ஸ்பெஷல் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து பெரிய அளவில் கொண்டாடினார்.

அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருந்தது. 3 பிரம்மாண்ட கேக் விக்னேஷ் சிவனுக்காக நயன்தாரா வாங்கியிருக்கிறார். அதில் ஒன்றில் அவர் இயக்குனர் என்பதை குறிப்பிடும் வகையில் உருவாக்கப்பட்டு இருந்தது. மற்றொன்று மூன்று அடுக்கு ஸ்பெஷல் கேக். அது மட்டுமின்றி பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்த இடத்தில் லைவ் மியூசிக் உள்ளிட்ட பல விஷயங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நயன்தாரா செய்திருக்கும் இந்த சர்ப்ரைஸ் கொண்டாட்ட ஏற்பாடுகள் அந்த வீடியோவில் காட்டப்பட்டு இருந்தது. அதை பார்த்து ரசிகர்கள் பிரமித்துப் போனார்கள்.

இந்நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி தங்கள் டூரை முடித்துவிட்டு தற்போது சென்னைக்கு திரும்பி இருக்கிறார்கள். அவர்கள் பிரைவேட் ஜெட் ஒன்றில் சென்னை வந்திறங்கிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. விமானத்திலிருந்து ஜோடியாக கைகோர்த்து அவர்கள் இருவரும் இறங்கி வருகிறார்கள்.


அது மட்டுமின்றி நயன்தாரா அணிந்திருக்கும் டி-சர்ட்டில் எழுதப்பட்டிருக்கும் விஷயமும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. This is a graphic tee என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக தனி விமானத்தில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா கொச்சிக்கு சென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருந்த போது அதை பார்த்து அனைவரும் பிரமித்தனர். நயன்தாரா தற்போது தனி விமானத்தில் செல்லும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார் என்பதை குறிப்பிட்டு பலரும் அவரை பாராட்டினார்கள். தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக அவர் கேரளாவில் இருந்து முதல் முறையாக இங்கு வந்த போது அவர் அரசு பேருந்தில் தான் வந்தார் என்றும், தற்போது தனி விமானத்தில் செல்லும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றும் பேசப்பட்டது.

அதனை தொடர்ந்து தற்போது அவர்கள் சென்னை திரும்பியிருக்கும் புகைப்படங்களும் வைரலாகி இருக்கிறது.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள். இந்த படத்தின் ஷுட்டிங் கூடிய விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தினை தயாரிக்கிறது. விஜய்யின் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் உரிமையை வாங்கி இருப்பதும் இதே நிறுவனம் தான்.

காத்துவாக்குல் ரெண்டு காதல் படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். ஹீரோயின்களாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கின்றனர். கடந்த பிப்ரவரி மாதமே இந்த படத்தின் அறிவிப்பு வந்தது, ஆனால் கொரோனா காரணமாக படப்பிடிப்பு துவங்காமல் இருக்கிறது.

மேலும் விக்னேஷ் சிவன் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி சேர இருந்த நிலையில் அதற்கு பதிலாக தற்போது ஒரு புதுமுக இயக்குனர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்