ஆப்நகரம்

அம்மா நிகழ்ச்சியில் பங்கேற்ற நயன்தாரா

சென்னையில் உள்ள ஒரு விளையாட்டு அகாடமி முதல் நினைவு நாள் கொண்டாட்டத்தில் நடிகை நயன்தாரா கலந்துக் கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

TNN 31 Aug 2016, 10:04 am
சென்னை: சென்னையில் உள்ள ஒரு விளையாட்டு அகாடமி முதல் நினைவு நாள் கொண்டாட்டத்தில் நடிகை நயன்தாரா கலந்துக் கொண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
Samayam Tamil nayanthara attended the amma sports foundation celebration at madras university in chennai
அம்மா நிகழ்ச்சியில் பங்கேற்ற நயன்தாரா


கடந்த திங்களன்று மாலை சென்னை பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அம்மா ஸ்போர்ட்ஸ் பவுன்டேஷன் அகாடமியின் முதாலம் ஆண்டு நினைவு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

அதிலும், செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், முன்னர் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி, ஸ்ரீகாந்த், முன்னாள் ஹாக்கி கேப்டன் வி.பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.


சில விளயாட்டு மேதைகளை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் நயன்தாராவுடன், சினேகா, பிரசன்னா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும் கலந்துக் கொண்டனர். மிகவும் எளிமையாகவும், தனக்கே உரிய ஸ்டைல் பாணியிலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நயன்தாரா அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் என்பதில் சந்தேகமில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்