ஆப்நகரம்

அறம்2-வில் அரசியலில் குதிக்கிறார் நயன்தாரா?!

செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள ‘அறம் 2’ படத்தில் நடிகை நயன்தாரா நடிப்பது உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது.

Samayam Tamil 4 Apr 2018, 4:59 pm
செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள ‘அறம் 2’ படத்தில் நடிகை நயன்தாரா நடிப்பது உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது.
Samayam Tamil aramm2


லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில், கோபி நயினார் இயக்கத்தில் வெளியான படம் ‘அறம்’. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தையும் கோபி நயினாரே இயக்கவுள்ளார். இவர் இயக்கிய முதல் படமான ‘அறம்‘ படத்தைப் திரையுலகினர், ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல்வாதிகளும் பாராட்டினர். இந்த படம் பாக்ஸ் ஆபீசில் மிகப்பெரிய ஹிட் படமாக மாறியது.

கலெக்டரான நயன்தாரா ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை, காப்பாற்றப் போராடுவதுதான் படத்தின் கதை. இந்த படத்தின் தொடர்ச்சியாக ‘அறம்-2’ இயக்கப்படும் என்ற செய்திகள் வெளியானது. இதில் நயன்தாராவே நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அறம்-2 படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் மத ரீதியிலான வன்முறைகள், சாதிய கொடுமைகளை எதிர்த்து நயன்தாரா போராடுவது போல கதை அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்