ஆப்நகரம்

சொந்த குரலில் டப்பிங் பேசும் நயன்தாரா!

நடிகை நயன்தாரா ‘அறம்’ படத்திற்காக தனது சொந்த குரலில் டப்பிங் பேசுகிறார்.

TNN 8 Feb 2017, 3:15 pm
சென்னை: நடிகை நயன்தாரா ‘அறம்’ படத்திற்காக தனது சொந்த குரலில் டப்பிங் பேசுகிறார்.
Samayam Tamil nayanthara dubbed her own voice for aram movie
சொந்த குரலில் டப்பிங் பேசும் நயன்தாரா!


நடிகை நயன்தாரா, கோபி நயினார் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘அறம்’. இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக எடிட்டிங் பணிகள் முடிவடைந்து டப்பிங்கை தொடங்கியிருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் மாவட்ட ஆட்சியராக நடிக்கும் நயன்தாரா, அந்த கதாபாத்திரத்தில் பொறுப்பை உணர்ந்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம்.

மேலும், இந்த படத்தின் கதை ஒரே நாளில் நடிப்பது போல் படமாக்கப்பட்டிருக்கிறது. இதனால் நடிகை நயன்தாரா ஒரே ஒரு காஸ்டியூம் அணிந்துதான் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நடைபெற்ற 50 நாட்களும் ஒரே காஷ்டியூம்தான் அணிந்து நடித்திருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்கு வந்ததும், முந்தின நாள் நடித்த காட்சிகளை பார்த்து விட்டு அதன் தொடர்ச்சி வரவேண்டும் என்பதற்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்தி நடித்துள்ளார் நடிகை நயன்தாரா. ‘நானும் ரௌடிதான்’ படத்திற்குப் பிறகு ‘அறம்’ படத்தில் சொந்தமாக டப்பிங் பேசியுள்ளார் நயன்தாரா.

Nayanthara dubbed her own voice for Aram Movie.

அடுத்த செய்தி

டிரெண்டிங்