ஆப்நகரம்

நயன்தாரா ஏன் 'அப்படி' சொன்னார்னு அப்போ புரியல, இப்ப தானே புரியுது

தர்பார் படத்தில் நடித்து முடித்த கையோடு நயன்தாரா அளித்த பேட்டியின் அர்த்தம் தற்போது தான் புரிகிறது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 9 Jan 2020, 4:58 pm
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. அந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருக்கும் நயன்தாராவை பார்த்து ரசிகர்கள் பாவப்படுகிறார்கள். நயன்தாராவை அழகாக காட்டியுள்ளார்கள். அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் அவருக்கு நன்றாக நடிக்கத் தெரியும் என்பது முருகதாஸுக்கு தெரியாமல் போய்விட்டதே என்கிறார்கள் நயன்தாரா ரசிகர்கள்.
Samayam Tamil nayanthara


தர்பாரில் நயன்தாரா பெயருக்கு தான் ஹீரோயின். அவருக்கு படத்தில் ஒரு வேலையும் இல்லை. ரஜினியின் மகளாக நடித்த நிவேதா தாமஸ் தான் ரசிகர்களின் கைதட்டல்களை பெறுகிறார். இதை பார்த்த நயன்தாரா ரசிகர்களோ தலைவி ஏன் அப்படி பேட்டி கொடுத்தார் என்று அப்போ புரியல, இப்போ புரியுது என்கிறார்கள்.

சும்மா கிழி, கிழின்னு கிழிச்ச ரஜினி: தர்பார் விமர்சனம்

அதாவது தர்பார் படத்தில் நடித்து முடித்த கையோடு முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தில் நடித்தது தான் நான் என் கெரியரில் செய்த மிகப் பெரிய தவறு என்று பேட்டி அளித்தார் நயன்தாரா. அதை பார்த்தவர்கள் என்ன இவங்க, முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடித்துவிட்டு இப்படி பேசுகிறாரே என்றார்கள்.

நீங்க இப்படி செய்வீங்கன்னு சத்தியமா எதிர்பார்க்கல முருகதாஸ்!

தர்பார் படத்தில் தன்னை டம்மி பீஸாக்கிய கோபத்தில் தான் நயன்தாரா பழசை எல்லாம் நினைவுபடுத்தி பேட்டி கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்