ஆப்நகரம்

நயன்தாராவுக்கு என்னாச்சு?: விக்கி வெளியிட்ட போட்டாவால் ரசிகர்கள் அதிர்ச்சி

விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சொல்லி வைத்தது போன்று ஒரே கேள்வியை கேட்டுள்ளனர்.

Samayam Tamil 1 Sep 2020, 6:40 pm
கொரோனா வைரஸ் பிரச்சனையால் 5 மாதங்களுக்கும் மேலாக நயன்தாரா சென்னையில் இருக்கும் தன் வீட்டில் முடங்கியிருந்தார். இந்நிலையில் ஓணம் பண்டிகையை தன் குடும்பத்தாருடன் கொண்டாட கொச்சிக்கு சென்றார்.
Samayam Tamil nayanthara


நயன்தாரா தன் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் தனி விமானம் மூலம் கொச்சிக்கு சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படம் வெளியாகி வைரலானது. அந்த புகைப்படத்தை பார்த்த அனைவரும் விக்னேஷ் சிவனுக்கு வாழ்வு தான் என்று தெரிவித்தனர்.

நயன், தனி விமானம், ஜாகுவார், செமயா வாழ்ற மேன்: விக்கியை விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்

கொச்சியில் ஓணம் பண்டிகையை கொண்டாடியபோது எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். மேலும் அந்த புகைப்படங்களை நயன்தாராவின் ரசிகர்கள் ட்விட்டரில் அதிக அளவில் ஷேர் செய்தனர்.

ஓணம் கொண்டாட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலர், நயன்தாராவுக்கு என்னாச்சு, முகம் ஏன் இப்படி ரொம்ப வயதானவர் போன்று இருக்கிறது. பார்க்க எங்களுக்கே ஒரு மாதிரியாக இருக்கிறதே என்று அக்கறையுடன் கேட்டுள்ளனர்.

நயன்தாரா புடவையில் அழகாக இருக்கிறார். அதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் அவர் முகத்தில் ஏதோ வித்தியாசமாக இருக்கிறது. திடீர் என்று பார்த்தால் இது நயன்தாரா தானா என்கிற சந்தேகம் எழுகிறது என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜோடியாக புகைப்படம் வெளியிடுவது எல்லாம் நல்லாத் தான் இருக்கு, எப்பொழுது கல்யாண புகைப்படத்தை போஸ்ட் செய்வீர்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கெரியரை பொறுத்த வரை நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கவிருக்கிறார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்பை திட்டமிட்டபடி ஆகஸ்ட் மாதம் துவங்க முடியவில்லை. ஆனால் படப்பிடிப்புகளை மீண்டும் துவங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் காத்து வாக்குல ரெண்டு காதல் வேலை விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். நானும் ரௌடி தான் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன், நயன்தாரா, விஜய் சேதுபதி மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார்கள்.

லாக்டவுனுக்கு முன்பு நயன்தாரா சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா முதல்முறையாக அம்மனாக நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படம் ஓடிடியில் வெளியாகப் போவதாக பேச்சு கிளம்பியுள்ளது. ஆனால் இந்த தகவலை ஆர்.ஜே. பாலாஜி உறுதி செய்யவில்லை.

முன்பும் கூட ஓடிடி ரிலீஸ் பற்றி பேச்சு கிளம்பியபோது, மூக்குத்தி அம்மன் படத்தை நிச்சயமாக தியேட்டர்களில் தான் வெளியிடுவோம் என்று தெரிவித்தார் ஆர்.ஜே. பாலாஜி.

அடுத்த செய்தி

டிரெண்டிங்