ஆப்நகரம்

‘தெறி’ படத்தை பாராட்டிய நயன்தாரா!

‘தெறி’ படத்தைப் பார்த்த நடிகை நயன்தாரா விஜய்யை பாராட்டியுள்ளார்.

TOI Contributor 18 Apr 2016, 1:19 pm
‘தெறி’ படத்தைப் பார்த்த நடிகை நயன்தாரா விஜய்யை பாராட்டியுள்ளார்.
Samayam Tamil nayanthara has appreaciated theri film
‘தெறி’ படத்தை பாராட்டிய நயன்தாரா!

விஜய் நடிப்பில் தற்போது வெளிவந்திருக்கும் படம் ‘தெறி’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளார்கள். அட்லி இயக்கியுள்ள இப்படத்தை தாணு தயாரித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். போலீஸ் கதையாக வெளிவந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இப்படத்தை திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், நயன்தாராவும் இப்படத்தை பாராட்டி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,
‘‘‘தெறி படம் என்னை மிகவும் கவர்ந்தது. பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய உணர்வு பூர்வமான கதை. விஜய் சாரின் நடிப்பு ரசிகர்களுக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறது. இது அனைவரும் பார்க்க வேண்டிய படம். ‘தெறி’ படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்றார்.
அட்லி இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். இதில் நயன்தாராவின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்