ஆப்நகரம்

பட்டும் திருந்தவில்லையே: நயன்தாராவுக்கு 'தில்'ல பார்த்தீங்களா?

நயன்தாரா செய்துள்ள காரியத்தை பார்த்தவர்கள் அந்தம்மாவுக்கு தில்லை பார்த்தீங்களா என்று பேசிக் கொள்கிறார்கள்.

Samayam Tamil 17 Sep 2019, 3:55 pm
நயன்தாரா தற்போது தனது கொள்கைகளை ஒவ்வொன்றாக தளர்த்திக் கொண்டிருக்கிறார். நடித்தால் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன் என்கிற கொள்கையை தளர்த்திவிட்டார்.
Samayam Tamil nayanthara


அஜித், விஜய், ரஜினிகாந்த், சிரஞ்சீவி என்று வரிசையாக ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் படங்களில் நடிப்பதோடு சரி இசை வெளியீட்டு விழா, விளம்பர நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டேன் என்கிற கொள்கையை பிகில் பட இயக்குநர் அட்லிக்காக தளர்த்தியுள்ளார்.

நண்பன் அட்லிக்காக தளர்த்திய கொள்கையை தெலுங்கு நடிகர் ராம் சரணுக்காக செய்ய மறுத்துவிட்டார் நயன்தாரா. ராம் சரண் தன் தந்தை சிரஞ்சீவியை வைத்து தயாரித்துள்ள சயீரா நரசிம்ம ரெட்டி தெலுங்கு பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுமாறு நயன்தாராவிடம் கேட்க அவர் முடியாது என்று கூறிவிட்டாராம்.

கடந்த 2014ம் ஆண்டு அனாமிகா தெலுங்கு பட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுத்ததால் நயன்தாராவுக்கு ஓராண்டு தடை விதித்தது டோலிவுட். இந்நிலையில் துணிச்சலாக சயீரா நரசிம்ம ரெட்டி விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுத்துள்ளார் நயன்.

நயன்தாரா செய்துள்ள காரியத்தை பார்த்த தெலுங்கு ரசிகர்கள் அவரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் ரசிகர்களோ தலைவிக்கு தில்லை பார்த்தியா என்று பெருமையாக பேசி வருகிறார்கள். சயீரா நரசிம்ம ரெட்டி விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மறுத்ததால் நயன்தாராவுக்கு மீண்டும் தடை விதிக்குமா தெலுங்கு திரையுலகம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தடையை பற்றி கவலைப்படும் நிலையில் இல்லை நயன்தாரா. கோலிவுட் அவரை கொண்டாடிக் கொண்டிருக்கும்போது டோலிவுட்டை நினைத்து அவர் ஏன் கவலைப்படப் போகிறார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

நயன்தாரா தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நெற்றிக்கண் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் டைட்டில் போஸ்டரை பார்த்தால் நயன்தாரா பார்வையற்றவராக நடிக்கிறார் என்று தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்