ஆப்நகரம்

பிகில் படக்குழுவை ஏமாற்றிய நயன்தாரா: மகிழ்ச்சியில் சயீரா நரசிம்ம ரெட்டி குழு

பிகில் இசை வெளியீட்டு விழாவில் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை.

Samayam Tamil 20 Sep 2019, 12:03 pm
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.
Samayam Tamil nayanthara


நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்களுக்கு பிகில் கொடுத்து அசத்தியது படக்குழு. இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த அனைத்து கண்களும் தேடிய ஆள் மட்டும் கடைசி வரைக்கும் வரவே இல்லை. அந்த நபர் வேறு யாரும் இல்லை, பிகில் பட நாயகி நயன்தாரா.

நயன்தாரா தான், எந்த படத்தில் நடித்தாலும் விளம்பர நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளுக்குமே வர மாட்டேன் என்று சொல்லிவிடுவாரே. அப்படி இருக்கும்போது அவரை ஏன் பிகில் விழாவில் எதிர்பார்க்க வேண்டும் என்று நினைக்கலாம்.

தம்பி அட்லிக்காக பிகில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள நயன்தாரா சம்மதித்ததாக கூறப்பட்டது. பெரிய படம் தயவு செய்து வாங்க என்று தயாரிப்பு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டதாம். இப்படி ஆளாளுக்கு அழைத்தும் நயன்தாரா வரவில்லை. இதையடுத்து தான் படக்குழு அதிருப்தி அடைந்துள்ளது.

நயன்தாராவையும், விஜய்யையும் ஒரே மேடையில் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்த்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நயன்தாரா செய்த காரியத்தை பார்த்து சயீரா நரசிம்ம ரெட்டி படக்குழு மகிழ்ச்சியில் உள்ளதாம்.

நயன்தாரா பிகில் நிகழ்ச்சியில் பங்கேற்க சம்மதம் தெரிவித்தது குறித்து அறிந்த சயீரா நரசிம்ம ரெட்டி குழு கடுப்பானது. காரணம் சயீரா நரசிம்ம ரெட்டி பட விழாக்களில் கலந்து கொள்ளுமாறு தயாரிப்பாளர் ராம் சரண் கோரிக்கை விடுத்தும் அதை கண்டுகொள்ளவில்லை நயன்தாரா. இந்நிலையில் தான் தெலுங்கு மட்டும் அல்ல தமிழ் படங்களுக்கும் நயன்தாரா இப்படித் தான் செய்கிறார் என்பதை அறிந்து சயீரா நரசிம்ம ரெட்டி குழுவுக்கு லேசான ஆறுதல் ஏற்பட்டுள்ளது.

சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிக்க நயன்தாராவுக்கு ரூ. 5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. கேட்ட பணத்தை கொடுத்தும் இப்படி முரண்டு பிடிக்கிறாரே என்பதே அவர்களின் வருத்தம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்