Nayanthara: பாந்த்ரா கோட்டையில் ஸ்பாட்டான நயன்தாரா... என்ன மேட்டருன்னு பாருங்க!
Nayanthara: நடிகை நயன்தாரா மும்பை பாந்த்ரா பகுதியில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.
Samayam Tamil12 Apr 2023, 10:40 am
நடிகை நயன்தாரா மும்பை பாந்த்ரா கோட்டையில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.
நயன்தாரா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள நயன்தாரா முதல் முறையாக பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். Vijay: ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே விஜய்க்கு பளார் விட்ட எஸ்ஏசி... பிரபலம் பகிர்ந்த திடுக் தகவல்!
ஜவான்
மேலும் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், நடிகர் விஜய் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஜவான் திரைப்படத்தை ஷாருக்கான்தான் தயாரித்து வருகிறார். மேலும் நடிகர்கள் சன்யா மல்ஹோத்ரா, பிரியா மணி, சுனில் க்ரோவர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜவான் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். Tanya Hope: ஹாட்னஸ் ஓவர்லோடட்... கிறங்க வைக்கும் தன்யா ஹோப்!
ஷாருக்கானுடன் டூயட்
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பில் தற்போது பங்கேற்றுள்ளார் நடிகை நயன்தாரா. மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள கோட்டையில் ஜவான் படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. நயன்தாராவுக்கும் ஷாருக்கானுக்குமான இந்த டூயட் பாடல் காட்சிக்கு ஃபரா கான் கோரியோக்ராஃப் செய்கிறார். ஏப்ரல் 10ஆம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நாட்கள் மறக்க முடியாதவை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
நயன்தாரா 75
நயன்தாரா சமீபத்தில் தனது 75வது படமான 'நயன்தாரா 75' படத்திற்கான முதல் ஷெட்யூல் படப்பிடிப்பை சென்னையில் முடித்தார். அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் ஜெய் மற்றும் சத்யராஜ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜவான் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த பின், மீண்டும் நயன்தாரா 75 படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா பங்கேற்பார் என கூறப்படுகிறது. Actor எனக்கென்ன படமா இல்ல... எல்லாம் அவங்க பாக்குற வேலை... கடுப்பில் லீன் நடிகர்!
சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த வாரம்தான் தங்களின் மகன்களின் பெயர்களை அறிவித்தனர். அதனை தொடர்ந்து நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கும்பகோணம் அருகே உள்ள தங்களின் குல தெய்வ கோவிலுக்கு சென்றனர். பின்னர் அருகில் உள்ள கோவில்களுக்கும் சென்றனர் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும். அப்போது தன்னோடு போட்டோ எடுக்க ஆசைப்பட்ட ரசிகர்களிடம் நடிகை நயன்தாரா கோபப்பட்டது பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
We use cookies and other tracking technologies to provide services in line with the preferences you reveal while browsing the Website to show personalize content and targeted ads, analyze site traffic, and understand where our audience is coming from in order to improve your browsing experience on our Website. By continuing to browse this Website, you consent to the use of these cookies. If you wish to object such processing, please read the instructions described in our privacy policy/cookie policy.