ஆப்நகரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கியிருந்த நடிகை நயன்தாரா!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கியிருந்த நடிகை நயன்தாரா!

TOI Contributor 10 Oct 2016, 1:28 am
நடிகை நயன்தாரா படப்பிடிப்பிற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தங்கியிருந்திருக்கிறார்.
Samayam Tamil nayanthara staying in ramanathapuram district for last two weeks
ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கியிருந்த நடிகை நயன்தாரா!


குடிநீர் பிரச்னை உள்ளிட்ட சமூக பிரச்னைகள் குறித்து தயாரிக்கப்பட இருக்கும் படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருக்கிறார். அதனால் படக்குழுவினர் குடிநீர் பிரச்னை தொடர்பாக மக்களிடம் கேட்டு அறிந்தனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து வருகிறது. சிக்கல், கடலாடி போன்ற ஊர்களுக்கு செல்லும் சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் ஷூட்டிங் நடைபெற்றது. நடிகை நயன்தாரா கீழக்கரையில் உள்ள பங்களாவில் தங்கியிருந்தார். அங்கிருந்து ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு எளிதில் சென்றுவரமுடியும் என்பதால் அங்கு தங்கவைக்கப்பட்டிருந்தார். இந்த பகுதியில் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து கீழக்கரையில் இருந்து நயன்தாரா புறப்பட்டு சென்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்