ஆப்நகரம்

வெயிட்டான ரோலுக்கு பரிந்துரை செய்த ஹீரோ: சம்பளத்தை குறைத்த நயன்

நயன்தாரா குஞ்சாக்கோ போபனுடன் சேர்ந்து நிழல் எனும் மலையாள படத்தில் நடிக்கிறார்.

Samayam Tamil 18 Oct 2020, 2:23 pm
லாக்டவுனுக்கு முன்பு நயன்தாரா ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். தன் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். படப்பிடிப்பை ஆகஸ்ட் மாதம் துவங்க திட்டமிட்டார்கள். ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனையால் அது நடக்கவில்லை.
Samayam Tamil nizhal


இந்நிலையில் நயன்தாரா எடிட்டர் அப்பு என். பட்டாத்திரி இயக்குநர் அவதாரம் எடுக்கும் நிழல் மலையாள படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் குஞ்சாக்கோ போபன் தான் ஹீரோ. படப்பிடிப்பு நாளை எர்ணாகுளத்தில் துவங்குகிறது.

படம் குறித்து குஞ்சாக்கோ போபன் கூறியதாவது,

20-20 பாடலுக்கு பிறகு 12 ஆண்டுகள் கழித்து நானும், நயன்தாராவும் 2020ம் ஆண்டில் சேர்ந்து நடிப்பது ஏதேச்சையானது. நிழல் படத்தின் கதையை நான் முன்பே கேட்டு, நடிக்க ஒப்புக் கொண்டேன். அந்த படத்தில் வெயிட்டான பெண் கதாபாத்திரம் உள்ளது. அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகையை தேடி வந்தார்கள்.

அப்பொழுது தான் நான் நயன்தாராவை பரிந்துரை செய்தேன். நயன்தாராவுக்கு கதை மிகவும் பிடித்துவிட்டது. நயன்தாரா நடிக்க சம்மதித்துவிட்டதால் படப்பிடிப்பை துவங்கவிருக்கிறோம்.

இந்த படத்தை பல லொகேஷன்களில் எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே நடிக்கவிருப்பதால் பிரச்சனை இல்லை. படத்தின் பெரும்பாலான காட்சிகள் எர்ணாகுளத்தில் ஷூட் செய்யப்படுகிறது. கேரளாவுக்கு வெளியே இரண்டு நாட்கள் தான் படப்பிடிப்பு.

படத்தில் சில பிரபலமான நடிகர்கள் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் குழந்தை நட்சத்திரம் ஒருவர் நடிக்கிறார் என்றார்.

நிழல் படத்தில் நடிக்க நயன்தாரா தன் சம்பளத்தை குறைத்துக் கொண்டுள்ளாராம். கொரோனா வைரஸ் பிரச்சனையால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா, விக்னேஷ் சிவன் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிழல் படத்தில் நடிக்கவிருக்கிறார். லாக்டவுன் நேரத்தில், படப்பிடிப்பு தளத்தில் இருப்பதை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டார் விக்னேஷ் சிவன். ஆனால் தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் நடந்து வரும் நிலையில் விக்னேஷ் சிவன் மட்டும் ஏன் ஷூட்டிங்கிற்கு கிளம்பவில்லை என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

துரோகி விஜய் சேதுபதி: ட்விட்டரில் டிரெண்டாகும் #TamilsTraitorVijaysethupathi

இதற்கிடையே 800 படத்தில் முத்தையா முரளிதரனாக நடிப்பதால் விஜய் சேதுபதிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் நடித்த மற்றும் நடிக்கவிருக்கும் படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதாக பலரும் கூறி வருகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்