ஆப்நகரம்

புது அவதாரம் எடுக்கும் யோகி பாபு: நம்பி ஓகே சொல்வாரா நயன்தாரா?

யோகி பாபு எழுதியுள்ள கதையில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 15 Apr 2020, 10:16 am
கோலிவுட்டின் பிசியான நகைச்சுவை நடிகரான யோகி பாபு தற்போது புது அவதாரம் எடுக்கிறாராம். அதாவது யோகி பாபு ஒரு கதை எழுதி வைத்துள்ளாராம். அந்த கதையை அவர் படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம்.
Samayam Tamil nayanthara


யோகி பாபுவின் கதையில் ஹீரோயினாக நடிக்குமாறு நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. யோகி பாபுவின் படத்தை சந்தானத்தின் டகால்டி படத்தை தயாரித்த 18 ரீல்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறதாம்.

தன் கதையை இயக்க இளம் இயக்குநர்களுடன் யோகி பாபு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொரோனா லாக்டவுன் முடிந்த பிறகு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

யோகி பாபு முன்னதாக நயன்தாராவுடன் சேர்ந்து கோலமாவு கோகிலா படத்தில் நடித்தார். அவர் தனுஷின் கர்ணன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் புதுமுகம் விஜய முருகன் இயக்கிய காக்டெய்ல் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

யோகி பாபு இந்த மாதம் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் நடத்த ஏற்பாடுகள் செய்தார். ஆனால் கொரோனா பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததால் அந்த நிகழ்ச்சியை தள்ளிப் போட்டுள்ளார். யோகி பாபுவுக்கும், மஞ்சு பார்கவிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 5ம் தேதி குலதெய்வம் கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது.

அந்த திருமணத்திற்கு யோகி பாபு யாரையும் அழைக்கவில்லை. குடும்ப சூழல் காரணமாக யாருக்கும் சொல்லாமல் திருமணம் செய்ய வேண்டியதாகிவிட்டதாக யோகி பாபு பின்னர் விளக்கம் அளித்தார்.

ஹர்பஜன் சிங் ஹீரோவாகும் படம்! இப்படி ஒரு ரோலில் நடிக்கிறாரா?

அடுத்த செய்தி

டிரெண்டிங்