ஆப்நகரம்

பகவதி அம்மனை அடுத்து திருச்செந்தூர் முருகனை தரிசித்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்

நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

Samayam Tamil 11 Dec 2019, 9:03 am
நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரியில் இருக்கும் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் காரில் திருச்செந்தூருக்கு சென்று முருகனை தரிசனம் செய்துள்ளனர்.
Samayam Tamil nayanthara


முருகன் கோவிலில் நயன்தாரா 30 நிமிடம் சாமி கும்பிட்டுள்ளார். நயன்தாரா வந்த விஷயம் அறிந்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரசிகர்கள் குவிந்துவிட்டனர். இதையடுத்து போலீசார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா பகவதி அம்மனாக நடிக்கிறாராம். படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் முன்பு அவர் கோவில், கோவிலாக சென்று ஆசி பெறுகிறாராம். முதல் முறையாக அம்மனாக நடிப்பதால் சாமிகளின் கருணையை எதிர்பார்க்கிறார் நயன்தாரா.

பகவதி அம்மன் கோவிலுக்கு விக்கியுடன் சென்ற நயன்: திருமணமோ?

நயன்தாரா முன்னதாக சீதாவாக நடித்திருந்தார். மூக்குத்தி அம்மன் படத்திற்காக நயன்தாரா அசைவை உணவுகளை தவிர்த்து விரதம் இருந்து வருகிறாராம். அவர் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றதை பார்த்தவர்கள் விரைவில் திருமணம் போன்று அது தான் இங்கு வந்திருக்கிறார் என்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2019ல் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட டாப் 10 ஹேஷ்டேக்: பிகிலுக்கு மட்டும் கிடைத்த கவுரவம்

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படியே ஒரு கோவிலில் இருந்து மாலையும், கழுத்துமாக தாலியுடன் நயன்தாரா வெளியே வர வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்