ஆப்நகரம்

காதலருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசித்த நயன்தாரா: பிகிலுக்கா, விக்கிக்கா?

நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றுள்ளார்.

Samayam Tamil 24 Oct 2019, 3:18 pm
நயன்தாரா தனது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கோவில்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் அவர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
Samayam Tamil nayanthara


சாமியை தரிசித்துவிட்டு கோவில் வளாகத்தில் நயன்தாரா விக்கியின் கையை பிடித்துக் கொண்டு நடந்து சென்றபோது எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. அவர்கள் அப்படி கை கோர்த்து நடந்த விதம் பிடித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.



நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் ஒரே மாதிரி வெள்ளை நிறத்தில் உடை அணிந்திருந்தார்கள். நயன் சிவப்பு நிற சால்வை அணிந்திருந்தார். நயன்தாரா பிகில் படம் வெற்றி பெற வேண்டி திருப்பதி கோவிலுக்கு சென்றாரா இல்லை விரைவில் விக்கியை திருமணம் செய்ய வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய சென்றாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

விஜய்யின் பிகில் படத்தை ஏன் பார்க்கணும், எதுக்கு பார்க்கணும்?

முன்னதாக நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து அத்திவரதரை தரிசித்தார். அப்பொழுது பூசாரிகள் நயன்தாராவையே பார்த்துக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. நயன் அத்திவரதரை தரிசிக்க, பூசாரிகளோ நயன்தாராவை தரிசித்தனர் என்று சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டது.

முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோவிலுக்கும் அவர்கள் ஜோடியாக சென்றுள்ளனர். சாமி விஷயத்தில் நயன்தாரா மிகுந்த ஈடுபாடு காட்டி வருகிறார். விக்னேஷ் சிவன், நயன்தாராவின் திருமணம் இந்த ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அட்லி என் கதையை சுட்டுட்டார், பிகிலுக்கு தடை விதிக்கணும்: மேலும் ஒருவர் வழக்கு

விக்கி நயனை தங்கமே, தங்கமே என்று தாங்குவதை பார்க்கும் ரசிகர்களோ, அன்பான இயக்குநரே விரைவில் தலைவியை திருமணம் செய்யுங்கள் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்