ஆப்நகரம்

Nayanthara: போட்டோ எடுத்தா போனை உடைச்சிருவேன்... ரசிகரிடம் சீறிய நயன்தாரா!

Nayanthara: தன்னை படம் பிடித்த ரசிகரை நடிகை நயன்தாரா எச்சரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 6 Apr 2023, 11:43 am
தன்னை படம் பிடித்த ரசிகரின் செல்போனை உடைத்துவிடுவேன் என நடிகை நயன்தாரா மிரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil nayanthara warning to a fan in train
Nayanthara: போட்டோ எடுத்தா போனை உடைச்சிருவேன்... ரசிகரிடம் சீறிய நயன்தாரா!


நயன்தாரா

பிரபல நடிகையான நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நேற்று கும்பகோணம் அருகே உள்ள குல தெய்வ கோவிலுக்கு சென்றார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றனர் நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும். விமான நிலையத்தில் திரண்ட ரசிகர் மன்ற நிர்வாகிகள் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Radhika Sarathkumar: ராதிகாவின் ஃபேமிலி அன்ட் புது ஃபேமிலி... கலக்கல் போட்டோஸ்!

கடுப்பான நயன்தாரா

இதையடுத்து காரில் புறப்பட்ட விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் கும்பகோணத்தை அடுத்த மேலவழுத்தூர் கிராமத்தில் உள்ள அவர்களின குல தெய்வமான ஆற்றங்கரை காமாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்தனர். அங்கு நயன்தாராவை காண ரசிகர்களும் மீடியாக்காரர்களும் திரண்டதால் கடுப்பானார் நயன்தாரா.
Vijayakanth: விஜயகாந்துக்கு வேறு என்னமோ நடந்திருக்கு... பிரபல நடிகர் உருக்கம்!

மாணவியிடம் கோபம்

அப்போது சாமி கும்பிட வந்திருக்கிறோம், 5 நிமிஷம் ப்ளீஸ் என கோபமாக பேசினார் நடிகை நயன்தாரா. அதன்பிறகு தாராசுரம் ஐரவாதீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும். அப்போது கல்லூரி மாணவிகள் சிலர் நயன்தாராவுடன் போட்டோ எடுத்தனர். அப்போது ஒரு மாணவியின் கை நயன்தாரா மீது பட்டுவிட்டது. இதனால் கடுப்பான நயன்தாரா அந்த மாணவியை எச்சரித்துவிட்டு சென்றார்.


Radhika SA Chandrasekhar: விஜய் அப்பாவுடன்... விஜய் டிவியில் அடியெடுத்து வைத்த ராதிகா!

ரயில் நிலையம்

பின்னர் திருச்சி ரயில் நிலையத்திற்கு சென்றனர் நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும். இதனை அறிந்த ரசிகர்கள், நயன்தாராவைக் காண ரயில் நிலையத்தில் முண்டியடித்தனர். அப்போதும் கடுகடுவென இருந்தார் நயன்தாரா. நயன்தாரா, ரயிலில் எறியபின் அங்கு இருந்த ரசிகர் ஒருவர் செல்போனில் அவரை போட்டோ எடுக்க முயன்றார்.
குஷ்புவுக்கு இப்படி நடந்திருக்க கூடாது!

செல்போனை உடைச்சிருவேன்

இதனை பார்த்து கடுப்பான நயன்தாரா, போட்டோ எடுத்தவரை பார்த்து போட்டோ எடுத்தால் போனை பிடுங்கி உடைத்து விடுவேன் என எச்சரித்தார். தன்னை செல்போனில் படம் பிடித்த ரசிகரின் செல்போனை உடைத்துவிடுவேன் என நடிகை நயன்தாரா மிரட்டியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நயன்தாரா நேற்று சென்ற அனைத்து இடங்களிலுமே கோபப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
Ajith: அஜித் ரேஸில் இருந்து விலகியதற்கு காரணம் இதுதான்... சர்ச்சையை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்!

Nayanthara Angry

அடுத்த செய்தி

டிரெண்டிங்